தொடக்கம் |
|
|
29. | எழுத்துடைக் கல் நிரைக்க வாயில் விழுத் தொடை அம் மாறு அலைக்கும் சுரம் நிரைத்து, அம் மாப் பெருந் தகு தாளாண்மைக்கு ஏற்க அரும் பொருள் ஆகும், அவர் காதல் அவா. | |
|
உரை
|
|
|
|
|
30. | வில் உழுது உண்பார் கடுகி அதர் அலைக்கும் கல் சூழ் பதுக்கை ஆர் அத்தத்து இறப்பார்கொல்- மெல் இயல் கண்ணோட்டம் இன்றி, பொருட்கு இவர்ந்து, நில்லாத உள்ளத்தவர்? | |
|
உரை
|
|
|
|
|
31. | பேழ் வாய் இரும் புலி குஞ்சரம் கோள் பிழைத்துப் பாழ் ஊர்ப் பொதியில் புகாப் பார்க்கும் ஆர் இடை, சூழாப் பொருள் நசைக்கண் சென்றோர், அருள் நினைந்து, வாழ்தியோ மற்று என் உயிர்? | |
|
உரை
|
|
|
|
|
32. | நீர் இல் அருஞ் சுரத்து ஆமான்இனம் வழங்கும் ஆர் இடை அத்தம் இறப்பர்கொல்?-ஆயிழாய்!- நாணினை நீக்கி, உயிரோடு உடன் சென்று காண, புணர்ப்பதுகொல் நெஞ்சு? | |
|
உரை
|
|
|
|
|
33. | பொறி கிளர் சேவல் வரி மரல் குத்த, நெறி தூர் அருஞ் சுரம் நாம் உன்னி, அறிவிட்டு அலர் மொழிச் சென்ற கொடி அக நாட்ட, வலன் உயர்ந்து தோன்றும் மலை. | |
|
உரை
|
|
|
|
|
34. | பீர் இவர் கூரை மறு மனைச் சேர்ந்து அல்கி, கூர் உகிர் எண்கின் இருங் கிளை கண்படுக்கும், நீர் இல், அருஞ் சுரம் முன்னி அறியார்கொல், ஈரம் இல் நெஞ்சினவர்? | |
|
உரை
|
|
|
|
|
35. | சூரல் புறவின் அணில் பிளிற்றும் சூழ் படப்பை ஊர் கெழு சேவல் இதலொடு போர் திளைக்கும் தேரொடு கானம், தெருள் இலார் செல்வார்கொல், ஊர் இடு கவ்வை ஒழித்து? | |
|
உரை
|
|
|
|
|
36. | முள்ளுடை மூங்கில் பிணங்கிய சூழ் படப்பை, புள்ளி வெருகு தன் குட்டிக்கு இரை பார்க்கும் கள்ளர் வழங்கும் சுரம் என்பர், காதலர் உள்ளம் படர்ந்த நெறி. | |
|
உரை
|
|
|
|
|
37. | பொரி புற ஓமைப் புகர் படு நீழல், வரி நுதல் யானை பிடியோடு உறங்கும் எரி மயங்கு கானம் செலவு உரைப்ப, நில்லா, அரி மயங்கு உண்கண்ணுள் நீர். | |
|
உரை
|
|
|
|
|
38. | கோள் வல்.... வய மாக் குழுமும் தாள் வீ பதுக்கைய கானம் இறந்தார்கொல்- ஆள்வினையின் ஆற்ற அகன்றவா நன்று உணரா மீளி கொள் மொய்ம்பினவர்? | |
|
உரை
|
|
|
|
|
39. | கொடுவரி பாயத் துணை இழந்து அஞ்சி, கடு உணங்கு பாறைக் கடவு தெவுட்டும் நெடு வரை அத்தம் இறப்பர்கொல், கோள் மாப் படு பகை பார்க்கும் சுரம்? | |
|
உரை
|
|
|
|
|
40. | மன்ற முது மரத்து ஆந்தை குரல் இயம்ப, குன்றகம் நண்ணி, குறும்பு இறந்து சென்றவர் உள்ளிய தன்மையர் போலும்-அடுத்து அடுத்து ஒள்ளிய தும்மல் வரும். | |
|
உரை
|
|
|
|
|
41. | பூங் கண் இடம் ஆடும்; கனவும் திருந்தின; ஓங்கிய குன்றம் இறந்தாரை யாம் நினைப்ப, வீங்கிய மென் தோள் கவினிப் பிணி தீர, பாங்கத்துப் பல்லி படும். | |
|
உரை
|
|
|
|
|
42. | ‘ஒல்லோம்!’ என்று ஏங்கி, உயங்கி இருப்பவோ? கல் இவர் அத்தம், அரி பெய் சிலம்பு ஒலிப்பக் கொல் களிறு அன்னான்பின் செல்லும்கொல், என் பேதை மெல் விரல் சேப்ப நடந்து? | |
|
உரை
|
|
|
|