தொடக்கம் |
|
|
43. | ஆற்றல் உடையன், அரும் பொறி நல் ஊரன், மேற்றுச் சிறு தாய காய்வு அஞ்சி, போற்று உருவிக் கட்டக முத்தின் புதல்வனை மார்பின்மேல் பட்டம் சிதைப்ப வரும். | |
|
உரை
|
|
|
|
|
44. | அகன் பணை ஊரனைத் தாமம் பிணித்தது இகன்மை கருதி இருப்பல்;-முகன் அமரா ஏதில் மகளிரை நோவது எவன்கொலோ, பேதைமை கண்டு ஒழுகுவார்? | |
|
உரை
|
|
|
|
|
45. | போத்து இல் கழுத்தின் புதல்வன் உணச் சான்றான்; மூத்தேம் இனி யாம்; வரு முலையார் சேரியுள், நீத்து நீர் ஊன வாய்ப் பாண! நீ போய் மொழி; கூத்தாடி உண்ணினும் உண். | |
|
உரை
|
|
|
|
|
46. | உழலை முருக்கிய செந் நோக்கு எருமை பழனம் படிந்து, செய் மாந்தி நிழல் வதியும், தண் துறை ஊரன் மலர் அன்ன மார்புற, பெண்டிர்க்கு உரை-பாண!-உய்த்து. | |
|
உரை
|
|
|
|
|
47. | தேம் கமழ் பொய்கை அக வயல் ஊரனைப் பூங் கண் புதல்வன் மிதித்து உழக்க, ஈங்குத் தளர் முலை பாராட்டி, என்னுடைய பாவை வளர் முலைக்கண் ஞெமுக்குவார். | |
|
உரை
|
|
|
|
|
48. | பேதை! புகலை; புதல்வன் துணைச் சான்றோன் ஓதை மலி மகிழ்நற்கு யாஅம் எவன் செய்தும்? பூ ஆர் குழல் கூந்தல் பொன் அன்னார் சேரியுள் ஓவாது செல்-பாண!-நீ. | |
|
உரை
|
|
|
|
|
49. | யாணர் நல் ஊரன் திறம் கிளப்பல்; என்னுடைய பாண! இருக்க அது களை; நாண் உடையான் தன் உற்ற எல்லாம் இருக்க; இரும் பாண! நின் உற்றதுண்டேல், உரை. | |
|
உரை
|
|
|
|
|
50. | ஒள் இதழ்த் தாமரைப் போது உறழும் ஊரனை உள்ளம் கொண்டு உள்ளான் என்று யார்க்கு உரைக்கோ?-ஒள்ளிழாய்!- அச்சுப் பணி மொழி உண்டேனோ, மேல் நாள் ஓர் பொய்ச் சூள் என அறியாதேன்? | |
|
உரை
|
|
|
|
|
51. | பேதையர் என்று தமரைச் செறுபவோ? போது உறழ் தாமரைக்கண் ஊரனை நேர் நோக்கி, வாய் மூடி இட்டும் இருப்பவோ?-மாணிழாய்- நோவது என்? மார்பு அறியும், இன்று. | |
|
உரை
|
|
|
|
|
52. | காதலின் தீரக் கழிய முயங்கன்மின்; ஓதம் துவன்றும் ஒலி புனல் ஊரனைப் பேதைப் பட்டு ஏங்கன்மின் நீயிரும், எண் இலா ஆசை ஒழிய உரைத்து. | |
|
உரை
|
|
|
|
|
53. | ‘உள் நாட்டம் சான்றவர் தந்த நசை இற்று என்று எண்ணார்க்குக் கண்ணோட்டம் தீர்க்குதும்’ என்று எண்ணி, வழிபாடு கொள்ளும் வள வயல் ஊரன் பழிபாடு நின் மேலது. | |
|
உரை
|
|
|
|
|
54. | உண் துறைப் பொய்கை வராஅல் இனம் இரியும் தண் துறை ஊர! தகுவதோ,-ஒண்டொடியைப் பாராய், மனை துறந்து, அச் சேரிச் செல்வதனை ஊராண்மை ஆக்கிக் கொளல்? | |
|
உரை
|
|
|
|
|
55. | பொய்கை நல் ஊரன் திறம் கிளத்தல்! என்னுடைய எவ்வம் எனினும், எழுந்தீக; வைகல் மறு இல் பொலந் தொடி வீசும், அலற்றும், சிறுவன் உடையேன் துணை. | |
|
உரை
|
|
|
|
|
56. | வள வயல் ஊரன் மருள் உரைக்கு மாதர் வளைஇய சக்கரத்து ஆழி, கொளை பிழையாது, ஒன்று இடைஇட்டு வருமேல், நின் வாழ் நாட்கள் ஒன்றி அனைத்தும் உளேன். | |
|
உரை
|
|
|
|