தொடக்கம் |
|
|
2. பாலை தலைமகனது செலவு உணர்ந்து, வேண்டாத மனத்தாளாய், தலைமகள் தோழிக்குச் சொல்லியது | |
11. | கழுநீர் மலர்க் கண்ணாய்! கௌவையோ நிற்க, பொருள் நீரார் காதலர் பொய்த்தனர், நீத்தார்- அழி நீர ஆகி, அரித்து எழுந்து தோன்றி, வழி நீர் அறுத்த சுரம். | |
|
உரை
|
|
|
|
|
'யான் பிரியத் தலைமகள் ஆற்றுமோ? நீ அறிவாயாக!'என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது | |
12. | முரி பரல ஆகி, முரண் அழிந்து தோன்றி, எரி பரந்த கானம் இயை பொருட்குப் போவீர்; அரி பரந்த உண்கண்ணாள் ஆற்றாமை நும்மின் தெரிவார் யார், தேரும் இடத்து? | |
|
உரை
|
|
|
|
|
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது | |
13. | ஓங்கு குருந்தோடு அரும்பு ஈன்று பாங்கர் மராஅ மலர்ந்தன, தோன்றி; விராஅய்க் கலந்தனர் சென்றார் வலந்த சொல் எல்லாம்- பொலந்தொடீஇ!-பொய்த்த குயில். | |
|
உரை
|
|
|
|
|
14. | புன்கு பொரி மலரும் பூந் தண் பொழில் எல்லாம் செங் கண் குயில் அகவும் போழ்து கண்டும், பொருள் நசை உள்ளம் துரப்ப, துறந்தார் வரு நசை பார்க்கும், என் நெஞ்சு. | |
|
உரை
|
|
|
|
|
'ஆற்றாள்!' எனக் கவன்ற தோழிக்கு, 'ஆற்றுவல்' என்பதுபடச் சொல்லியது | |
15. | சிறு புன் புறவொடு சிற்றெழால் சீறும் நெறி அரு நீள் சுரத்து அல்குவர்கொல்,-தோழி!- முறி எழில் மேனி பசப்ப, அருள் ஒழிந்து, ஆர் பொருள் வேட்கையவர்? | |
|
உரை
|
|
|
|
|
புணர்ந்து உடன்போகிய தலைமகன், தலைமகளை ஆற்றுவித்துக் கொண்டு சொல்லியது | |
16. | கருங் கால் மராஅ நுணாவோடு அலர, இருஞ் சிறை வண்டுஇனம் பாலை முரல,- அரும்பிய முள் எயிற்று அம் சொல் மடவாய்!- விரும்பு, நாம் செல்லும் இடம். | |
|
உரை
|
|
|
|
|
'ஆற்றாள்!' எனக் கவன்ற தோழிக்கு, 'ஆற்றுவல்' என்பதுபடச் சொல்லியது | |
17. | கல் அதர் வாயில், கடுந் துடிகள் பம்பும் வில் உழுது வாழ்நர் குறும்புள்ளும், போவர்கொல்- எல் வளை மென் தோள் நெகிழ, பொருள் நசைஇ, நல்காத் துறந்த நமர்? | |
|
உரை
|
|
|
|
|
செலவுக் குறிப்பு அறிந்த தலைமகள் உடன்படாது சொல்லியது | |
18. | கதிர் சுட, கண் உடைந்து, முத்தம் சொரியும் வெதிர் பிணங்கும் சோலை வியன் கானம் செல்வார்க்கு எதிர்வன போலிதே? எல் வளையோ, கொன்னே உதிர்வன போல உள! | |
|
உரை
|
|
|
|
|
'ஆற்றாள்!' எனக் கவன்ற தோழிக்கு, 'ஆற்றுவல்' என்பதுபடச் சொல்லியது | |
19. | கலையொடு மான் இரங்கு கல் அதர் அத்த நிலை அஞ்சி, நீள் சுரத்து அல்குவர்கொல்?-தோழி!- முலையொடு சோர்கின்ற, பொன் வண்ணம்; அன்னோ! வளையொடு சோரும், என் தோள். | |
|
உரை
|
|
|
|
|
மகள் போக்கிய நற்றாய் சொல்லியது | |
20. | ஏற்றிய வில்லின் எயினர் கடுஞ் சுரம், பாற்றினம் சேரப் படுநிழல் கண்டு அஞ்சி, கூற்று அன வல் வில் விடலையோடு என் மகள் ஆற்றும்கொல், ஐய நடந்து? | |
|
உரை
|
|
|
|