தொடக்கம் |
|
|
4. மருதம் தலைமகள் வாயில் மறுத்தது | |
31. | பழனம் படிந்த படு கோட்டு எருமை கழனி வினைஞர்க்கு எறிந்த பறை கேட்டு, உரன் அழிந்து, ஓடும் ஒலி புனல் ஊரன் கிழமை உடையன், என் தோட்கு. | |
|
உரை
|
|
|
|
|
32. | கணைகால் நெடு மருது கான்ற நறுந் தாது இணைக் கால நீலத்து இதழ்மேல் சொரியும் பணைத் தாட் கதிர்ச் செந்நெல் பாய் வயல் ஊரன் இணைத்தான், எமக்கும் ஓர் நோய். | |
|
உரை
|
|
|
|
|
33. | கடையாயார் நட்பேபோல், காஞ்சி நல் ஊர! உடைய இள நலம் உண்டாய்; கடை, அக் கதிர் முலை ஆகத்துக் கண் அன்னார் சேரி எதிர் நலம் ஏன்று நின்றாய். | |
|
உரை
|
|
|
|
|
தலைமகள் பாணற்கு வாயில் மறுத்தது | |
34. | செந்நெல் விளை வயல் ஊரன், சில பகல், தன் நலம் என் அலார்க்கு ஈயான்; எழு-பாண!- பாரித்த அல்குல் பணைத்தோளார் சேரியுள், வாரிக்குப் புக்கு, நின்று, ஆய்! | |
|
உரை
|
|
|
|
|
35. | வேனில் பருவத்து எதிர் மலர் ஏற்று ஊதும் கூனி வண்டு அன்ன குளிர் வயல் நல் ஊரன் மாண் இழை நல்லார் இள நலம் உண்டு, அவர் மேனி ஒழியவிடும். | |
|
உரை
|
|
|
|
|
தோழி வாயில் நேர்வாள் கூறியது | |
36. | செந்தாமரை மலரும் செய் வயல் நல் ஊர! நொந்தால் மற்று உன்னைச் செயப்படுவது என் உண்டாம்- தந்தாயும் நீயே; தர வந்த நல் நலம் கொண்டாயும் நீ ஆயக்கால்? | |
|
உரை
|
|
|
|
|
பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது | |
37. | பல் காலும் வந்து பயின்று உரையல்!-பாண!-கேள்; நெல் சேர் வள வயல் ஊரன் புணர்ந்த நாள், எல் வளையம்; மென் தோளேம்; எங்கையர்தம் போல நல்லவருள் நாட்டம் இலேம். | |
|
உரை
|
|
|
|
|
38. | நல் வயல் ஊரன் நலம் உரைத்து, நீ-பாண!- சொல்லின் பயின்று உரைக்க வேண்டா; ஒழிதி, நீ! எல்லு நல் முல்லைத் தார் சேர்ந்த இருங்கூந்தல் சொல்லும், அவர் வண்ணம் சோர்வு. | |
|
உரை
|
|
|
|
|
வாயில் வேண்டிச் சென்றார்க்குத் தலைமகள் வாயில் மறுத்தது | |
39. | கருங் கயத்து ஆங்கண் கழுமிய நீலம் பெரும் புற வாளைப் பெடை கதூஉம் ஊரன் விரும்பு நாள் போலான்; வியல் நலம் உண்டான்; கரும்பின் கோது ஆயினேம் யாம். | |
|
உரை
|
|
|
|
|
'இந் நிலத்தின்கண் இன்ன பெற்றியால் வருவாயாக!' எனச் சொல்லியது | |
40. | ஆம்பல் அணித் தழை ஆரம் துயல்வரும் தீம் புனல் ஊரன் மகள் இவள்; ஆய்ந்த நறுந் தே மலர் நீலம் பிணையல்; செறி மலர்த் தாமரை, தன்னையர் பூ. | |
|
உரை
|
|
|
|