தொடக்கம் |
|
|
5. நெய்தல் அல்லகுறிப்பட்டுப் பெயர்ந்த தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது | |
41. | நெய்தல் படப்பை நிறை கழித் தண் சேர்ப்பன் கைதை சூழ் கானலுள் கண்ட நாள்போல் ஆனான்; செய்த குறியும் பொய் ஆயின;-ஆயிழையாய்!- ஐதுகொல், ஆன்றார் தொடர்பு? | |
|
உரை
|
|
|
|
|
42. | முத்தம் அரும்பும் முடத் தாள் முது புன்னை தத்தும் திரை தயங்கும் தண் அம் கடற் சேர்ப்ப! சித்திரப் பூங் கொடி அன்னாட்கு அருளீயாய், வித்தகப் பைம் பூண் நின் மார்பு! | |
|
உரை
|
|
|
|
|
அல்லகுறிப்பட்டுப் பெயர்ந்த தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது | |
43. | எறி சுறா நீள் கடல் ஓதம் உலாவ, நெறி இறாக் கொட்கும் நிமிர் கழிச் சேர்ப்பன்,- அறிவு அறா இன் சொல் அணியிழையாய்!-நின் இல் செறிவு அறா, செய்த குறி. | |
|
உரை
|
|
|
|
|
தலைமகனைக் கண்ணுற்று நின்ற தோழி வரைவு கடாயது | |
44. | இன மீன் இருங் கழி ஓதம் உலாவ, மணி நீர் பரக்கும் துறைவ! தகுமோ- குண நீர்மை குன்றாக் கொடி அன்னாள் பக்கம் நினை நீர்மை இல்லா ஒழிவு? | |
|
உரை
|
|
|
|
|
45. | கடல் கொழித்திட்ட கதிர் மணி முத்தம் படம் அணி அல்குல் பரதர் மகளிர் தொடலை சேர்த்து ஆடும் துறைவ! என் தோழி உடலும், உறு நோய் உரைத்து. | |
|
உரை
|
|
|
|
|
46. | முருகு இயல் கானல் அகன் கரை ஆங்கண் குருகுஇனம் ஆர்க்கும் கொடுங் கழிச் சேர்ப்ப! மருவி வரலுற வேண்டும், என் தோழி உரு அழி உள் நோய் கெட. | |
|
உரை
|
|
|
|
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழியால் சொல் எடுப்பப்பட்டு, தலைமகள் சொல்லியது | |
47. | அணி பூங் கழிக் கானல், அற்றை நாள் போலான்; மணி எழில் மேனி மலர் பசப்பு ஊர, துணி கடற் சேர்ப்பன் துறந்தான்கொல்?-தோழி!- தணியும், என் மென் தோள் வளை. | |
|
உரை
|
|
|
|
|
தோழி தலைமகளை இரவுக்குறி நயப்பித்தது | |
48. | கறங்கு மணி நெடுந் தேர் கண் வாள் அறுப்ப, பிறங்கு மணல்மேல் அலவன் பரப்ப, வறம் கூர் கடுங் கதிர் வல் விரைந்து நீங்க, நிறம் கூரும் மாலை வரும். | |
|
உரை
|
|
|
|
|
தலைமகன் பாங்கற்குச் சொல்லியது | |
49. | மயில்கொல்? மடவாள்கொல்? மாநீர்த் திரையுள் பயில்வதோர் தெய்வம்கொல்?-கேளீர்!-குயில் பயிரும் கன்னி இள ஞாழல் பூம் பொழில் நோக்கிய கண்ணின் வருந்தும், என் நெஞ்சு. | |
|
உரை
|
|
|
|
|
பகற்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய் தோழி வரைவு கடாயது | |
50. | பவழமும் முத்தும் பளிங்கும் விரைஇ, புகழக் கொணர்ந்து, புறவு அடுக்கும் முன்றில், தவழ் திரைச் சேர்ப்பன் வருவான்கொல்?-தோழி!- திகழும், திரு அமர் மார்பு. | |
|
உரை
|
|
|
|