பக்கம் எண் :


2. மனையறம்படுத்த காதை

நறுமலர்க் கோதைநின் நலம்பா ராட்டுநர்
மறுவின் மங்கல வணியே யன்றியும்
பிறிதணி யணியப் பெற்றதை யெவன்கொல்


62
உரை
64

       நறுமலர்க் கோதை - நறிய மலரை யணிந்த கோதையே, நின் நலம் பாராட்டுநர் - நின்னைப் புனைந்து அழகு செய்யும் மகளிர், மறுஇல் மங்கல அணியே அன்றியும் - குற்றமற்ற நினது புனையாத அழகிருக்கவும் அஃதன்றி, பிறிது அணி அணியப் பெற்றதை எவன்கொல் - வேறு சில அணிகளை அணிந்த தனாற் பெற்றது யாதோ ;

       நலம் பாராட்டுநர் - ஒப்பனை செய்வார், மங்கலவணி - இயற் கையழகு ; மாங்கலிய மென்பாருமுளர். அணிய - அணிதலால்.

       1"உமிழ்சுடர்க் கலன்கள் நங்கை யுருவினை மறைப்ப தோரார்"

       என்பது ஒப்பு நோக்கற்பாலது.

1. கம்ப, பால.