70 |
திருமுலைத் தடத்திடைத்
தொய்யி லன்றியும்
ஒருகாழ் முத்தமொ டுற்றதை யெவன்கொல |
|
திருமுலைத்
தடத்திடைத் தொய்யில் அன்றியும் - அவர், முலைத்தடத்தின்மேல் தொய்யி லெழுதுத லன்றியும்,
ஒரு காழ் முத்தமொடு உற்றதை எவன்கொல் - தனி முத்து வடத் தைப் பூட்டுவதற்கு அதனோடு
அவர்க்குண்டான உரிமை யாதோ ;
திரு - முலைமேற் றோன்றும் வீற்றுத்
தெய்வம் எனபர் ; 1"ஆமணங்கு குடியிருந்
தஞ்சுணங்கு பரந்தனவே" என்றார் சிந்தா மணியிலும். தடம் - பரப்பு. காழ் - வடம். முத்தக்
காழ் என மாறுக. |
1.
சீவக, நாமக. 142.
|
|
|