வாழ்க
எங்கோ மன்னவர் பெருந்தகை - (பறை யறைவோர்), அரசர்க்கரசனாய எம் தலைவன் நீடு
வாழ்க, ஊழி தோறூழி உலகங் காக்கென - பல ஊழிகளிலும் அவன் இவ்வுல கத்தை நன்கு காப்பானாகவென
வாழ்த்தி, வில் தலைக்கொண்ட வியன் பேர் இமயத்து ஓர் கல் கொண்டு பெயரும் எம்
காவலன் ஆதலின் - வில்லைத் தன்னிடத்தேயுடைய அகன்ற பெரிய இமய வரையில் கற்புக்கடவுள்
பொருட்டால் ஓர் கல்லினைக் கொண்டு மீள்வான் எம் மன்னன் ஆகலான், வடதிசை மருங்கின்
மன்னர் எல்லாம் இடுதிறை கொடுவந்து எதிரீர் ஆயின் - வடநாட்டு வேந்தீர் நீவிர்
யாவிரும் அவற்கு இடத்தக்க திறையினைக் கொண்டுவந்து கொடுத்து அவன் தலைமையை ஏற்றுக்
கொண்மின் அங்ஙனம் ஏற்றுக்கொள்ளீராயின், கடற் கடம்பு எறிந்த கடும்போர் வார்த்தையும்
- கடலின்கண் கடம்பின் முதலை வெட்டிய கொடிய போரினைக் குறித்த உரையையும், விடர்ச்சிலை
பொறித்த வியன்பெரு வார்த்தையும் - இமயத்துத் தன் வில்லினைப் பொறித்த பெருஞ்
செயலைக் குறித்த உரையையும், கேட்டு வாழுமின் - அறிந்து வாழ்மின், கேளீராயின் தோள்
துணை துறக்கும் துறவொடு வாழுமின் - அறியீராயின் மனைவி யரை வெறுக்கும் தவத்தினை மேற்கொண்டு
வாழுமின் என்று, தாழ் கழல் மன்னன் தன் திருமேனி வாழ்க சேனாமுகம் என வாழ்த்தி
- பொருந்திய வீரக்கழலையுடைய அரசனது திருமேனி யாகிய சேனாமுகம் வாழ்க என்று வாழ்த்தி,
இறை இகல் யானை எருத்தது ஏற்றி அறை பறை எழுந்தது ஆல் அணிநகர் மருங்கு என் - முரணுடைய
அரசுவாவின் பிடரின்கண் ஏற்றி அழகிய வஞ்சிநகரிடத்து அறையும் பறையின் ஒலி மிக்குத்
தோன்றியது;
முதலிலும் இறுதியிலும் அரசனை வாழ்த்துதல்
மரபு. தலை - உச்சியுமாம். எதிர்வீர்; அங்ஙனம் எதிரீர் ஆயின் என அறுத்துரைக்க.
விடர் - முழைஞ்சு; ஆகுபெயர். வார்த்தை என்றமையால் அவை எங்கணும் பேசப்படும் என்றவாறாயிற்று;
கடலைக் கடந்தும் மலையைத் தாண்டியும் வாழுமின் என்றபடி. வாழுமின் என்று என விரிக்க.
தாழ்தல் தங்குதல். அரசற்குச் சேனை சிறந்ததாகலின் திருமேனி யென்றார். திருமேனியாகிய
சேனாமுகம் வாழ்கவென வாழ்த்தி என்க. இறை யானை - பட்டத்து யானை. பறை - பறை யின்
ஒலி. எருத்தத்தேற்றி வாழுமின் (என்று கூறி) வாழ்த்தி அறை பறை எழுந்ததென முடிவு செய்க.
காட்சி - கற்கொள்ள
உள்ளத்தால் உறுதி கோடல்.
காட்சிக்காதை முற்றிற்று.
|