பக்கம் எண் :


2. மனையறம்படுத்த காதை

தயங்கிணர்க் கோதை தன்னொடு தருக்கி
வயங்கிணர்த் தாரோன் மகிழ்ந்துசெல் வுழிநாள


82
உரை
83

       தயங்கு இணர்க் கோதை தன்னொடு தருக்கி - விளங்கு கின்ற பூங் கொத்துக்களாலாகிய கோதையையுடையாளோடும் இன்பத்தில் மிக்கு, வயங்கு இணர்த் தாரோன் மகிழ்ந்து செல் வுழி நாள் - விளங்குகின்ற இணர்த் தாரினை யுடையோன் மகிழ்ந்து செல்லா நின்ற நாட்களில் ஒருநாள்,

       தயங்கல், வயங்கல் இரண்டும் விளக்கமென்னும் பொருளன ; இங்ஙனம் வருவனவற்றைப் பரியாயவலங்காரமென்பர் அடியார்க்கு நல்லார்.