வித்தகர்
இயற்றிய விளங்கிய கோலத்து முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டி - கைத்தொழில் வல்லார்
செய்த சிறந்த அழகினையுடைய அணிகலன்களை முழுவதும் அணிந்து, பூப்பலி செய்து - அருச்சனை
செய்து, காப்புக் கடை நிறுத்தி - திசைக் கடவுளரைக் கடைவாயிலினிறுத்தி, வேள்வியும்
விழாவும் நாடொறும் வகுத்து-ஓமமும் விழவும் நாள்தோறும் வகை பெறச்செய்து, கடவுள் மங்கலஞ்
செய்கென ஏவினன் வட திசை வணக்கிய மன்னவர் ஏறு என்-பிரதிட்டை செய்கவென்று ஏவினான்
வடநாட்டு மன்னரை வணங்கச் செய்த வேந்தர் பெருமானாகிய செங்குட்டுவன் என்க.
வேள்வி - ஓமம். கடவுள் மங்கலம்
- பிரதிட்டை. மன்னவரேறு நங்கையைப் பத்தினிக் கோட்டத்துத் தெய்வப்படிமத்துக்
கடவுண் மங்கலஞ் செய்கென ஏவினன் என முடிக்க.
|