50
|
கொய்தளிர்க் குறிஞ்சிக் கோமான்
றன்முன்
கடவுண் மங்கலங் காணிய வந்த
மடமொழி நல்லார் மாணிழை யோருள்
அரட்டன் செட்டிதன் ஆயிழை ஈன்ற
இரட்டையம் பெண்கள் இருவரு மன்றியும்
ஆடக மாடத் தரவணைக் கிடந்தோன்
சேடக் குடும்பியின் சிறுமகள் ஈங்குளள
|
|
கொய்தளிர்க்
குறிஞ்சிக் கோமான் தன்முன்-கொய்த தளிர் இடையிட்டுத் தொடுத்த குறிஞ்சி மலர்மாலை
சூடிய செங் குட்டுவன் எதிரே, கடவுள் மங்கலம் காணிய வந்த மடமொழி நல்லார் மாண் இழையோருள்
- கண்ணகி பிரதிட்டையைக் கண்டு வணங்கப் போந்த மென சொற்களையுடையராகிய மாட்சிமைப்பட்ட
அணிகலன் அணிந்த மகளிருள், அரட்டன் செட்டி தன் ஆயிழை ஈன்ற இரட்டையம் பெண்கள் இருவரும்
அன்றியும் - அரட்டன் செட்டியின் மனைவி பெற்ற இரட்டையாகத் தோன்றிய மகளிர் இருவரும்
அன்றியும், ஆடகமாடத்து அரவணைக் கிடந்தோன் சேடக் குடும்பியின் சிறுமகள் ஈங்கு உளள்
- திருவனந்தபுரத்து அராவணையிற் பள்ளிகொண்ட திருமாற்குத் தொண்டு செய்யுங் குடும்பத்தை
யுடையானது சிறிய மகளாயினாளும் இவ்விடத்துள்ளாள் ;
குறிஞ்சிக் கோமான் - மலைநாட்டரசன்
எனக் கொண்டு, கொய் தளிர் என்பதனைக் குறிஞ்சியாகிய இடத்து நிகழ் பொருளுக்கு அடையாக்கினும்
அமையும். காணிய, செய்யியவென்னும் வினையெச்சம். ஆடகமாடம் - திருவனந்தபுரம் ; இரவிபுரம்
என்பாருமுளர். சேடன் - அடியவன் ; திருவடி பிடிப்பான் எனலுமாம். |
|
|