இறுதி வெண்பா
பூம்புகார்ப் பொற்றொடி மாதவி -
அழகிய புகார்நகரிற் பிறந்த பொன்வளை யணிந்த மாதவி யென்னும் கணிகை, ஆடு அரங்கின்
வந்து - நடிக்கும் அரங்கத்திலே வந்து, எண்ணும் எழுத்தும் - எல்லாக் கலைகட்கும் கருவியாகிய
கணிதம் இலக்கணம் என்பவற்றையும், இயல் ஐந்தும் - இயற்றமிழின் ஐந்து பாகுபாட்டினையும்,
பண் நான்கும் - இசைத்தமிழின் நாற்பெரும் பண்ணையும், பண்நின்ற கூத்துப் பதினொன்றும்
- நாடகத்தமிழின் இனிமையுடைய பதினொரு கூத்தினையும், தன் வாக்கினால்-தன்வாக்கினாலும்
கூத்தினாலும், மண்ணின்மேல் போக்கினாள்-புவிமுழுதும் அறிந்து புகழும்படி செய்தாள்.
கூத்தினாலும் என விரித்துரைத்துக்கொள்க.
அரங்கேற்று காதை முற்றிற்று.
|