வாரித்
தரள நகை செய்து - கடல் முத்தாகிய நகையினைத் தோற்றி, வண் செம்பவள வாய் மலர்ந்து
- அழகிய சிவந்த பவளமாகிய வாய் திறந்து, சேரிப் பரதர் வலை முன்றில் திரை உலாவு
கடற் சேர்ப்ப - பரதர் சேரியில் வலை உணங்கும் மனை முற்றத்தே அலைகள் உலாவும் கடலின்
கரையையுடைய தலைவனே, மாரிப் பீரத்து அலர் வண்ணம் மடவாள் கொள்ள - தலைவியானவள்
மாரிக்காலத்து மலரும் பீர்க்கின் மலர் போலும் நிறத்தைக் கொள்வாளாயின், கடவுள்
வரைந்து - தெய்வத்தை வழிபட்டு, ஆர் இக் கொடுமை செய்தார் என்று அன்னை அறியின்
- இக் கொடுமை செய்தவர் யாரென்று அன்னை ஆராய்ந்தறியின், என் செய்கோ - என்ன
செய்வேன் ;
பீரத்து - பீர் அத்துச்
சாரியை பெற்றது ; இதனை 1"ஆரும்
வெதிரும்" என்னுஞ் சூத்திரத்து, மெய் பெற என்றதனான் முடிப்பர். வண்ணம் - பொன்னிறம்
; பசலை. வரைந்து - வழிபட்டு, அறியின் - ஆராய்ந்தறியினென்க.
1
தொல். எழுத்து. 363.
|