பக்கம் எண் :

7. கானல்வரி

 

[ 47 ]

ஆங்கனம் பாடிய ஆயிழை பின்னரும்
காந்தள் மெல்விரற் கைக்கிளை சேர்குரல்
தீந்தொடைச் செவ்வழிப் பாலை இசைஎழீ இப்
பாங்கினிற் பாடியோர் பண்ணுப் பெயர்த்தாள்.



256
உரை
259

         ஆங்கனம் பாடிய ஆயிழை - அங்ஙனம் கோவலன் பாடினாற் போலப் பாடிய மாதவி, பின்னரும், - பின்பும், காந்தள் மெல்விரல் - காந்தள் மலர் போலும் மெல்லிய விரலால், கைக் கிளை சேர்குரல் தீந்தொடைச் செவ்வழிப் பாலை இசை எழீஇ- கைக்கிளை குரலாகிய இன்னிசையுடைய செவ்வழிப்பாலை என்னும் இசையை யெழுப்பி, பாங்கினிற் பாடி - அதனை முறைமையிற் பாடி, ஓர் பண்ணுப் பெயர்த்தாள்-பின் வேறொரு பண்ணினைப் பாடத் தொடங்கினாள் ;

         அங்ஙனம் என்னுஞ் சுட்டு நீண்டு ஆங்ஙனம் என்றாகி, எதுகை நோக்கி ஆங்கனம் என்றாயிற்று. ஆங்ஙனமென்றே கூறினும் இழுக்கின்று. விரலால் கைக்கிளை குரலாகிய செவ்வழிப்பாலை யிசையை எழுப்பியென்க. தீந்தொடை - ஈண்டு இன்னிசை. பண்ணு - பண்ணை.