பக்கம் எண் :

10. நாடுகாண் காதை






245

அறியா மையினின் றிழிபிறப் புற்றோர்
உறையூர் நொச்சி யொருபுடை யொதுங்கிப்
பன்னிரு மதியம் படர்நோ யுழந்தபின்
முன்னை யுருவம் பெறுகவீங் கிவரெனச்

சாபவிடை செய்து தவப்பெருஞ் சிறப்பின்



241
உரை
245

       அறியாமையின் இன்று இழி பிறப்பு உற்றோர் - தமது அறியாமை காரணமாக இன்று இழி பிறவி உற்ற இவர்கள், உறையூர் நொச்சி ஒரு புடை ஒதுங்கி - உறையூர் மதிற் புறமாகிய காவற் காட்டிற் றிரிந்து, பன்னிரு மதியம் படர்நோய் உழந்தபின் - பன்னிரண்டு திங்கள் நினைந்து வருந்தத் தக்க துன்பத்தினான் வருந்திய பின்னர், முன்னை உருவம் பெறுக ஈங்கு இவர் எனச் சாபவிடை செய்து - முன்னை வடிவத்தினை இவர் பெறுவாராக என்று சாபவிடை செய்து ;

       நெடுங்காலம் தவஞ்செய்து பெற்ற மக்கட் பிறப்பை ஒரு மொழியான் இழந்தனர் என்பது தோன்ற இழிபிறப்பு உற்றோர் என்றார். இதனானே யா காவா ராயினும் நா காத்தல் இன்றியமையாதது என்பது பெறப்படும்.