{ முடியுடைவேந்தர்
........ முற்றிற்று. }
முடியுடை வேந்தர் மூவருள்ளும் - முடியுடை யரசராகிய சோழர் பாண்டியர் சேரர் என்னும் மூவருள்ளும்,
தொடி விளங்கு தடக்கைச் சோழர் குலத்து உதித்தோர் - வீரவளை விளங்கும் பெரிய கையையுடைய
சோழர் குலத்துப் பிறந்தோருடைய, அறனும்...... என்றிவை அனைத்தும் - அறன் முதலாகப்
பாணியீறாகவுள்ள அனைத்தும், பிற பொருள் வைப்போடு ஒன்றித் தோன்றும் தனிக்கோள்
நிலைமையும் - ஈண்டுச் சொல்லாத பிறபொருள்களின் கிடக்கையோடு பொருந்தித் தோன்றும்
ஒப்பற்ற முறைமையின் நிலைபேறும், ஒரு பரிசா நோக்கிக் கிடந்த புகார்க் காண்டம்
முற்றிற்று - ஒரு படியாக நோக்கிக் கிடந்த புகார்க் காண்டம் முற்றியது.
அடிகள் இக் காண்டத்துக் கூறிய பொருள்கள்
இன்னின்ன வென இதன்கட் குறிப்பிடுகின்றார். அவற்றுள்,
அறன் |
அறனோம்படை (5 : 179.) |
மறன் |
இமயத்துப் புலி பொறித்தது.
(5 : 97--8.) |
ஆற்றல் |
அமராபதி காத்தது. (6 : 14.) |
மூதூர்ப் பண்பு மேம்படுதல் |
ஒடுக்கங் கூறாமை. (1 : 18.) |
விழவு மலி சிறப்பு |
இந்திர விழவு (5.) விண்ணவர்
வரவு (6 : 72--3.) |
குடி |
உழவிடை விளைப்போர். (10
; 150.) |
கூழின் பெருக்கம் |
செந்நெற் காய்த்தலையில் கூட்டின்
நெற் சொரிதல். (10 : 123--4.) |
காவிரிச் சிறப்பு |
''கரியவன் புகையினும்.........ஒலிக்கும்''
(10 : 102--9) |
பொய்யா வானம் புதுப்புனல் பொழிதல்
|
மழைக்கரு வுயிர்த்தல். (10
: 143.) |
அரங்கும் ஆடலும்
தூக்கும். (3). |
வரி |
கண்கூடுவரி முதலிய எட்டுவரியும்.
(8 : 74--108) |
பாரதி விருத்தி |
பதினோராடல் (6 : 39--63.) |
திணைநிலைவரி
(7 : 17--23.) |
இணைநிலைவரி
(7.) |
யாழின் றொகுதி |
''சித்திரப்படம்'' முதல் ''பட்டடை''
ஈறாகவுள்ளன. (7 : 1) |
''உழைமுதற் கைக்கிளை''
முதலாயினவுமாம் (8 : 32.) |
ஈரேழ் சகோடம் |
''ஈரேழ் தொடுத்த செம்முறைக்
கேள்வி'' (3 : 70.) |
இடநிலைப் பாலை |
''கோடி விளரிமேற் செம்பாலை''
முதலாயின (3 : 88.) |
தாரத் தாக்கம்
(8 : 38.) |
தான்றெரி பண் |
அகநிலை மருதம் முதலாயின. (8
: 39--40) |
ஊரகத்து ஏர் |
ஊரின் வண்ணம் (5.) |
ஒளியுடைப் பாணி |
''வெங்கட் டொலைச்சிய விருந்திற்
பாணி'' முதலாயின. (10 : 131.) |
வெண்பா
(காலையரும்பி............புகார்)
காலை அரும்பி மலரும் கதிரவனும்
- காலையில் உதித்து ஒளி விரியும் பரிதியும், மாலை மதியமும் போல் - மாலையில்
உதிக்கும் வளருமியல்புடைய திங்களும் போல, வாழியரோ - வாழ்வதாக; வேலை அகழால்
அமைந்த அவனிக்கு - கடலாகிய அகழோடு அமைந்த புவனிக்கு, மாலைப் புகழால் அமைந்த புகார்
- மாலையெனப்படும் புகழோடு பொருந்திய காவிரிப்பூம் பட்டினம்.
ஆல் - ஓடு. புகார் வாழியரோ என்க.
புகார்க்காண்டம் முற்றிற்று
|