"அணிமுடி.....அடுவிலையே" அணிமுடி அமரர்தம் அரசொடு பணிதரும் - அழகிய முடிசூடிய தேவர்கள்
தம் அரசனாகிய இந்திரனொடு வந்து வணங்குகின்ற, மணி உருவினை நின மலர் அடிதொழுதேம்
- நீலமணி போலும் நிறத்தினையுடையாய் நின்னுடைய மலர் போன்ற திருவடிகளை வணங்கினேம்;
கண நிரை பெறு விறல் எயின் இடுகடன் இது நிணன் உகு குருதி கொள் நிகர் அடுவிலையே
- திரண்ட ஆனிரையைப் பெறும் வெற்றியினையுடைய மறவர்கள் பகைவரை அடுதற்குக் காரணமாகிய
விலையாக இடுங்கடன் நிணத்தொடு சிந்தும் உதிரமாகும் இக் கடனை நீ கொள்வாயாக ;
நின என்பதன்கண் 'அ' ஆறாம் வேற்றுமையுருபு.
எயின் - எயினர். எயின் அடுவிலை இடுகடன் குருதி என இயைக்க.
|