"துடியொடு..........மடையே" துடியொடு சிறுபறை வயிரொடு துவை செய வெடிபட - துடியுடனே சிறுபறையும்
கொம்பும் மிக முழங்க, வருபவர் எயினர்கள் அரையிருள். அடுபுலி அனையவர் - நள்ளிரவில்
வருபவர்களாகிய கொல்லும் புலியை யொத்த மறவர்கள், குமரி நின் அடிதொடு படுகடன் -
குமரியாகிய நினது அடியினைத் தொட்டுச் சூளுற்ற கடன், இது உகு பலி முக மடையே - மிடற்றினின்றுஞ்
சிந்தும் குருதியாகும் ; இக் கடனை நீ கொள்வாயாக ;
நிலம் வெடிக்கும்படி வருபவரென்றுமாம்.
படு - பொருந்திய ; மிக்க எனினும் அமையும். முகமடை - மிடறு. இதுபலி - இக்கடன் ;
கொள்கவென்பது சொல்லெச்சம். இவை மூன்றும் அவிப்பலியென்னும் துறையின்பாற் படும்
; குருதிப் பலி யென்பாரு முளர்.
|