பக்கம் எண் :


2. வேட்டுவ வரி



20

             வேறு

வம்பலர் பல்கி வழியும் வளம்பட
அம்புடை வல்வில் எயின்கடன் உண்குவாய்
சங்கரி அந்தரி நீலி சடாமுடிச்
செங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய் ;



20
உரை
20

        "வம்பலர் பல்கி.....சேர்த்துவாய்" வம்பலர் பல்கி வழியும் வளம்பட - வழிகளும் ஆறுசெல்வோர் நிறையப் பெறுதலான் அவர்தம் பொருளாகிய வளம் உண்டாம் வண்ணம், அம்புடை வல்வில் எயின் கடன் உண்குவாய் - அம்பு பொருந்திய வலிய வில் ஏந்திய மறவரது பலிக் கடனை உண்பாயாக ; சங்கரி அந்தரி நீலி சடாமுடிச் செங்கண் அரவு பிறையுடன் சேர்த்து வாய் - சங்கரி, அந்தரி, நீலி, சடைமுடிக்கண் சிவந்த கண்களையுடைய பாம்பினை இளம் பிறையோடு சேர்த்துச் சூடுபவளே ;

        சேர்த்துவாய் வழிவளம்பட எயின் கடன் உண்குவாய் என்க. முன்னர்க் கொற்றவை கடன் கொள்ளாமையான், "மறக்குடித் தாயத்து வழிவளஞ் சுரவாது" என்றாராகலான், ஈண்டு வழிவளம் படக் கடன் உண்குவாய் என்றார். வம்பலர் - புதியராய் வருபவர். சடாமுடி - வடசொன் முடிபு.