பக்கம் எண் :


2. வேட்டுவ வரி



21

             வேறு

துண்ணென் துடியொடு துஞ்சூர் எறிதரு
கண்ணில் எயினர் இடுகடன் உண்குவாய்
விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்குவாய் ;



21
உரை
21

        "துண்ணென்.....செய்குவாய்" துண் என் துடியொடு துஞ்சு ஊர் எறிதரு - கேட்டார் துண்ணென நடுங்குமாறு ஒலி செய்யும் துடியுடனே பகைவர் உறங்குங் காலத்து ஊர்க் கொலை செய்யும், கண்இல் எயினர் இடுகடன் உண்குவாய் - கண்ணோட்ட மில்லாத மறவர் இடும் பலிக்கடனை நீ உண்பாயாக ; விண்ணோர் அமுது உண்டும் சாவ ஒருவரும் உண்ணாத நஞ்சு உண்டு இருந்து அருள் செய்குவாய் - விண்ணவர் சாவா மருந்தாகிய அமுதமுண்டும் இறப்பவும் எத்தகையோரும் உண்ணவொண்ணாத நஞ்சினை உண்டும் இறவாதே இருந்தருள்வாய் ;
         இருந்து அருள் செய்குவாய் கடன் உண்குவாய் என்க. துஞ்சூர் எறிதலை 1"ஊர் கொலை" என்னும் வெட்சித்திணைத் துறையானறிக.


1. 1. தொல். பொருள். 58.