|
போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரலென் பனபோல் மறித்துக்கை காட்டப்
|
|
போர்
உழந்து எடுத்த ஆர் எயில் நெடுங்கொடி - பகைவர் வருந்தப் போர் தேய்த்தெடுத்த அரிய
மதிலின்கண் நெடிய கொடிகள், வாரல் என்பனபோல் மறித்துக் கை காட்ட- இம் மதுரைக்கண்
வாராதொழிவா யென்பன போலத் தம் கையின் மறித்துக் காட்ட ;
ஆரெயில் நெடுங்கொடி மேல்காற்றடிக்க
அசைகின்றவை கோவலனை இங்கு வாராதே போ என்று கை காட்டினாற் போன் றன ; தற்குறிப்பேற்றம்.
1"
ஈண்டுநீ வரினு மெங்க ளெழிலுடை யெழிலி வண்ணன் பாண்டவர் தங்கட் கல்லாற் படைத்துணை
யாக மாட்டான் மீண்டுபோ கென்றென் றந்த வியன்மதிற் குடுமி தோறும் காண்டகு பதாகை
யாடை கைகளாற் றடுப்ப போன்ற"
என்னுஞ் செய்யுள் இக் கருத்தைப் பின்பற்றியதாதல்
காண்க.
|
1
வி. பாரதம். வாசுதேவனை. 6.
|
|
|