பக்கம் எண் :

5. அடைக்கலக் காதை




45
ஞான நன்னெறி நல்வரம் பாயோன்
தானங் கொள்ளுந் தகைமையின் வருவோன்
தளர்ந்த நடையில் தண்டுகா லூன்றி
வளைந்த யாக்கை மறையோன் றன்னைப்

பாகுகழிந் தியாங்கணும் பறைபட வரூஉம்
வேக யானை வெம்மையிற் கைக்கொள


42
உரை
47

      ஞான நல்நெறி நல் வரம்பு ஆயோன் - வீடு சேறற்கு நல்ல நெறியாகிய ஞானத்திற்குச் சிறந்த எல்லையாயுள்ளோன், தானம் கொள்ளும் தகைமையின் வருவோன் தளர்ந்தநடையில் தண்டுகால் ஊன்றி - தானத்தைப் பெறும் தகுதியோடு தளர்ந்த நடையுடன் ஊன்றுகோலையே காலாக ஊன்றி வருவோனாகிய, வளைந்த யாக்கை மறையோன் தன்னை - கூனிய உடம்பினை யுடைய அந்தணனை, பாகு கழிந்து யாங்கணும் பறை பட வரூஉம் வேக யானை - பாகர் செயலைக் கடந்து எவ்விடத்தும் பறை கொட்ட வருகின்ற மதவேகத்தினையுடைய யானை, வெம்மை யில் கைக்கொள - சினத்தால் பற்றிக்கொண்டதாக ;

      1"தளர்ந்த நடையிற் றண்டுகால் ஊன்றி, வளைந்த யாக் கையோர் மறையோன்" என்பர் மணிமேகலையினும், பாகு - பாகர். கழிந்து என்றது அவர்க்கு அடங்காமை கூறிற்று. பறைபடுதல் மக்கள் அறிந்து காத்தற்கு.

      பொழியக் கொள்ளும் தகைமையின் வருவோனாகிய மறை யோன் தன்னை யானை கைக்கொள என்க.

1 மணி, 14 : 30--1.