பக்கம் எண் :


5. அடைக்கலக் காதை




195
சாரணர் கூறிய தகைசால் நன்மொழி
ஆரணங் காக அறந்தலைப் பட்டோர்
அன்றப் பதியுள் அருந்தவ மாக்களும்
தன்தெறல் வாழ்க்கைச் சாவக மாக்களும்

இட்ட தானத் தெட்டியும் மனைவியும்
முட்டா இன்பத்து முடிவுல கெய்தினர


192
உரை
197

      சாரணர் கூறிய தகைசால் நன்மொழி - சாரணர் மொழிந்த தகுதி யமைந்த நல்ல அறவுரையை, அன்று - அந் நாளில், ஆர் அணங்கு ஆக அறந்தலைப்பட்டோர் - மறை மொழியாகக் கொண்டு அறத்துவழி நின்றோராகிய, அப் பதியுள் அருந்தவ மாக்களும் - அந் நகரத்துக்கண் அரிய தவமுடையோரும். தன்தெறல் வாழ்க்கைச் சாவக மாக்களும் - தனக்கென வாழாத வாழ்க்கையினையுடைய உலக நோன்பிகளும், இட்ட தானத்து எட்டியும் மனைவியும் - தானம் செய்த சாயலனும் அவன் மனைவியும், முட்டா இன்பத்து முடிவுலகு எய்தினர் - குறைவிலா இன்பத்தினையுடைய வீட்டுலகத்தினை அடைந்தனர் ;

      ஆரணங்காக என்பதற்குத் தெய்வத் தன்மையோடு கூடியதாக எனலுமாம் . தன் தெறல் வாழ்க்கை - தான் என்னுந் தன்மையைக் கெடுத்த வாழ்க்கை ; தனக்கெனவாழாது பிறர்க்கென வாழும் வாழ்க்கை. இட்ட தானம் - குரங்கின் பொருட்டுச் செய்த தானம். முட்டா இன்பம் - தடையிலா இன்பம், நிறைந்த இன்பம். வீட்டுலகினும் முடிவான வேறு உலகம் இன்மையான் அவ்வுலகு முடிவுலகு எனப்பட்டது. இது தானத்தின் சிறப்பிற்கு மேற்கோளாகும்.