பக்கம் எண் :

6. கொலைக்களக் காதை

170

மருந்திற் பட்டீ ராயின் யாவரும்
பெரும்பெயர் மன்னனிற் பெருநவைப் பட்டீர்


170
உரை
171

        மருந்திற் பட்டீர் ஆயின் யாவரும் பெரும் பெயர் மன்னனிற் பெரு நவைப் பட்டீர் - இவன் மருந்தின்கண் அகப் பட்டீராயின் நீவிர் யாவிரும் பெரிய புகழையுடைய அரசனால் கடுந்தண்டத்தினை அடைந்தீர் ;

       மருந்திற் பட்டீராயின் என்றது, முன்னர் இலக்கணமுறைமையின் கொலைப்படுமகனலன் எனக் கூறியதனை உட்கொண்டது. நவை - துன்பம் ; தண்டம். நவைப் பட்டீர்; துணிவு பற்றி இறந்த காலத்தாற் கூறினான்.

     இனி, மந்திர முதலிய எட்டன் விளைவு கூறவான்:-