பக்கம் எண் :

8. துன்ப மாலை





50


வாய்வதின் வந்த குரவையின் வந்தீண்டும் ஆய மடமகளி ரெல்லீருங் கேட்டீமின் ஆய மடமகளி ரெல்லீருங் கேட்டைக்க

பாய்திரை வேலிப் படுபொருள் நீயறிதி காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என்கணவன் கள்வனோ அல்லன் கருங்கயற்கண் மாதராய் ஒள்ளெரி யுண்ணுமிவ் வூரென்ற தொருகுரல்.



47
உரை
53

        வாய்வதின் வந்த குரவையின் வந்து ஈண்டும் ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டீமின் ஆய மடமகளிர் எல்லீரும் கேட்டைக்க - மேல்வருந் தீமை நீங்குதல் வாய்த்தற் பொருட்டான் எடுத்த குரவைக்கூத்தினுள் வந்து திரண்ட இடைக்குலப் பெண்டிர் யாவிரும் கேண்மின் இடைக்குலப் பெண்டிர் யாவிரும் கேட்க, பாய் திரை வேலிப் படுபொருள் நீ அறிதி காய் கதிர்ச் செல்வனே கள்வனோ என் கணவன் - காய்கின்ற கதிர்களையுடைய செல்வனே பரந்த அலைகளையுடைய கடலை வேலியாகவுடைய இவ் வுலகத்துத் தோன்றும் பொருள்கள் யாவற்றையும் நீ அறிவாய் ஆகலான் நீயறிய என் கணவன் கள்வனோ சொல்லென்றாள், கள்வனோ அல்லன் கருங்கயற்கண் மாதராய் ஒள்ளெரி உண்ணும் இவ்வூர் என்றது ஒருகுரல் - என்றவட்கு ஓர் அசரீரி கரிய கயல்போலுங் கண்களையுடைய மாதே நின் கணவன் கள்வனல்லன் அவனைக் கள்வனென்ற இவ்வூரினை விளக்கம் பொருந்திய தீ உண்ணும் என்று கூறிற்று என்க.

       கேட்டீமின் - கேண்மின் ; வினைத்திரிசொல், கேட்டை என்னும் வினையசைச்சொல் ஈற்றுவியங்கோள் விகுதி பெற்றுக் கேட்க வென்னும் பொருட்டாயிற்று. கேட்டீமின் கேட்டைக்க என இரட்டித்தது யாவருங் கேட்டற்பொருட்டாம். பாய்தல் - பரத்தல். முதற்கண் கள்வனோ என்றதன்கண் ஓ வினாப்பொருட்டு ; பின்னதன் ஓ பிரிநிலை. உண்ணும், முற்று. இவ்வூர் - கள்வனென்று கூறிய இவ்வூர்.

                     இது மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா.
                          
                          துன்ப மாலை முற்றிற்று
.