பக்கம் எண் :


9. ஊர்சூழ் வரி

புல்லென் மருள்மாலைப் பூங்கொடியாள் பூசலிட
ஒல்லென் ஒலிபடைத்த தூர்


33
உரை
34

       புல்லென் மருள் மாலைப் பூங்கொடியாள் பூசலிட ஒல் லென் ஒலி படைத்தது ஊர் - அங்ஙனம் அவன் மறைதலானே புல்லென்ற மருட்சியையுடைய மாலைக் காலத்தே பூத்துஉதிர்த்த கொடிபோன்ற கண்ணகி தன் கணவனிடத்திருந்து அழுது அரற்றலான் அவ்வூர் ஒல்லென்னும் ஒலியினைப் படைத்தது ;

       சிறிது காலமே நிற்றலான் புன்மை உடைத்தாயிற்று ; புற் கென்ற நிறமுமாம். இரவென்றும் பகலென்றும் துணியலாகாது மயங்குதற்கேதுவாகிய மாலையென்க. ஒல்லென், ஒலிக்குறிப்பு.