பக்கம் எண் :


11. வஞ்சினமாலை






45
யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த
கோநகர் சீறினேன் குற்றமிலேன் யானென்று
இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து

மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்டா ளெறிந்தாள் விளங்கிழையாள் வட்டித்த


41
உரை
46

யான் அமர் காதலன் தன்னைத் தவறு இழைத்த - யான் விரும்பிய என் காதலனைக் கொலை செய்த, கோ நகர் சீறினேன் குற்றமிலேன் யான் என்று - மன்னனது நகரத்தினை வெகுண்டேன் அச் சீற்றத்தால் யான் குற்றமுடையே னல்லேன் என்று கூறி, இட முலை கையால் திருகி - இடப் பக்கத்து முலையினை வலக்கையால் திருகி, மதுரை வலமுறை மும்முறை வாரா அலமந்து - மதுரை நகரத்தினை வலமாக மூன்று முறை வந்து மயங்கி, மட்டு ஆர் மறுகின் மணி முலையை வட்டித்து விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள் - விளங்கிய அணி யினையுடையாள் தன் அழகிய அம் முலையினைச் சூளுற்றுத் தேன் நிறைந்த மறுகின்கண் விட்டெறிந்தாள் ;

தவறு - கொலை. கோ நகர் - அரசன் தலைநகர். அலமந்து - சுழன்று, மயங்கி. வட்டித்தல் - பிரதிக்கினை செய்தல்; சுழற்றுதல் எனலுமாம். விட்டாள் ; முற்றெச்சம். விளங்கிழையாள் குற்ற மிலேன் யானென்று திருகி வாரா அலமந்து வட்டித்து எறிந்தாள் என்க.