வார்
ஒலி கூந்தல் நின் மணமகன் தன்னை - நீண்டு தழைந்த கூந்தால் நின் கணவனை, ஈரேழ்
நாளகத்து எல்லை நீங்கி - பதினான்கு நாளளவு கழிந்த பின்னர், வானோர் தங்கள் வடிவின்
அல்லதை ஈனோர் வடிவிற் காண்டல் இல் என - தேவர்களுடைய வடிவத்துக் காண்பதல்லது இவ்வுலக
மக்களுடைய வடிவத்துக் காணுதல் இல்லையென்று, மதுரை மா தெய்வம் மாபத்தினிக்கு விதிமுறை
சொல்லி அழல் வீடு கொண்ட பின் - மதுரைத் தெய்வமாகிய பெருமையுடைய மதுராபதி பெருமை
மிக்க கற்புடைய கண்ணகிக்கு ஊழ்வினையின் தன்மையினைச் சொல்லித் தீயின் விடுதலையைக்
கொண்ட பின்னர் ;
அல்லதை, ஐ இடைச்சொல், ஈனோர் - இவ்வுலகோர்
; ஈன் - இவ்விடம். அழல் வீடாவது தீ யெரித்தலை நிறுத்தல். "வாரொலி... லில்லென"
என்னும் நான்கடியும் இந் நூற் பதிகத்துள் (50--3) வந்துள்ளமையுங் காண்க.
|