பக்கம் எண் :

22

       தீமைசால் கட்டினுக்குத் திறற்கருவி யாய்க்கிடந்த
       தாமஞ்சார் நமர்களுக்கு நயப்படுமா றினிதுரைத்துச்
       சேமஞ்சார் நன்னெறிக்குச் செல்லுமா றருளினையே
       எண்ணிறந்த குணந்தோய்நீ யாவர்க்கு மரியோய்நீ
       உண்ணிறைந்த வருளோய்நீ யுயர்பார நிறைந்தோய்நீ
       மெய்ப்பொருளை யறிந்தோய்நீ மெய்யறமிங் களித்தோய்நீ
       செப்பரிய தவத்தோய்நீ சேர்வார்க்குச் சார்வுநீ
       நன்மைநீ தின்மைநீ நனவுநீ கனவுநீ
       வன்மைநீ மென்மைநீ மதியுநீ விதியுநீ
       இம்மைநீ மறுமைநீ இரவுநீ பகலுநீ
       செம்மைநீ கருமைநீ சேர்வுநீ சார்வுநீ
       அருளாழி நயந்தோய்நீ அறவாழி பயந்தோய்நீ
       மருளாழி துரந்தோய்நீ மறையாழி புரந்தோய்நீ
       மாதவரின் மாதவனீ வானவருள் வானவனீ
       போதனருட் போதனனீ புண்ணியருட் புண்ணியனீ
       ஆதிநீ யமலனீ யயனுநீ யரியுநீ
       சோதிநீ நாதனீ துறைவனீ யிறைவனீ
       அருளுநீ பொருளுநீ அறவனீ யநகனீ
       தெருளுநீ திருவுநீ செறிவுநீ செம்மனீ”

எனவரும் பழம் பாடலானும் (வீரசோழியம் : யாப்புப் படலம் 11 - ஆம்
கவித்துறையின் உரையிற்கண்டவை) இன்னும்,

         “தரும தலைவன் றலைமையி னுரைத்த
          பெருமைசால் நல்லறம் பெருகா தாகி
          இறுதியில் நற்கதி செல்லும் பெருவழி
          அறுகையு நெருஞ்சியு மடர்ந்துகண் ணடைத்தாங்குக்
          செயிர்வழங்கு தீக்கதி திறந்து கல்லென்
          றுயிர்வழங்கு பெருநெறி யொருதிறம் பட்டது
          தண்பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம்
          உண்டென வுணர்த லல்ல தியாவதுங்
          கண்டினிது விளங்காக் காட்சி போன்றது
          சலாகை நுழைந்த மணித்துளை யகவையின்
          உலாநீர்ப் பெருங்கட லோடா தாயினு
          மாங்கத் துளைவழி யுகுநீர் போல
          வீங்கு நல்லற மெய்தலு முண்டெனச்