ஒவ்வொரு காண்டமும் பல படலங்களை உட்பிரிவுகளாகக் கொண்டு விளங்கும். பாலகாண்டம் இருபத்து மூன்று படலங்கள் கொண்டது. பெருங்காப்பிய இலக்கணப்படி ஆறு. நாடு. நகரம் முதலாயின வருணிக்கப்படுதல் இன்றியமையாதது. ஆற்றுப்படலம் - ஆற்றைப் பற்றிய படலம் என விரியும். இங்குச் சிறப்பித்துப் பேசப்படும் ஆறு சரயு நதியாகும். கோசல நாட்டுக்கு வளமூட்டும் சரயு நதியின் வெள்ளம். தன்மை. போக்கு ஆகியவற்றை இப்படலம் விளக்குகிறது. மழை வளம் |