பக்கம் எண் :

  ஆற்றுப் படலம்17

அவ்  வாரி- அந்த வெள்ளப் பெருக்கு; பூ நிரைத்தும்  - பல நிற
மலர்களை     வரிசைப்படுத்தியும்;        மென்            தாது
பொருந்தியும்
-மென்மையான  மகரந்தப்  பொடி பொருத்தப்  பெற்றும்;
தேன்     அளாவியும்
-தேனொடு     கலந்தும்;        செம்பொன்
விராவியும்
-செம்பொன்  கலந்தும்;  ஆற்றொடு-ஆற்றிலே; ஆனை மா
மதம்    அளாவியும்
-ஆனைகளின்    மிகுந்த    மதநீர்   கலந்தும்;
வானவில்லை     நிகர்த்தது
-பலநிறங்கள்   கொண்ட    வானவிலை
ஒத்திருந்தது.

பல  நிறங்கள்   கொண்ட   பொருள்கள்   ஆற்று   வெள்ளத்தில்
கலந்திருந்த காட்சி வானவில்லைக் கண்டதுபோல் இருந்தது கருத்து.  8
 
                                  வானரக் கூட்டம்: வெள்ளம்
 

20.

மலை எடுத்து. மரங்கள் பறித்து. மாடு
இலை முதல் பொருள் யாவையும் ஏந்தலான்.
அலை கடல்-தலை அன்று அணை வேண்டிய
நிலையுடைக் கவி நீக்கம் - அந் நீத்தமே.
 

மலை   எடுத்து  - மலைகளைப் பெயர்த்துக் கொண்டும்; மரங்கள்
பறித்து
-மரங்களை   வேருடன் பறித்துக் கொண்டும்; மாடு-பக்கங்களில்
உள்ள;   இலை  முதல்  பொருள்-இலை  முதலிய  பொருள்களாகிய;
யாவையும் ஏந்தலான்
-எல்லாவற்றையும் ஏந்தி வருவதால்; அலை கடல்
தலை
-அலைகளையுடைய   கடலிடத்தே; அன்று-இராமபிரான் கடலைக்
கடக்க  நேர்ந்த அந்தக்  காலத்தில்; அணை வேண்டிய- அணை கட்ட
விரும்பிய:  நிலையுடைக்  கவி நீத்தம்- (இராமபிரான் திருப்பணியிலே)
நிலைபேறுடைய   வானரப்    பெருங்கூட்டத்தைப்   போலவே;  அந்
நீத்தமே
- அந்தச் சரயுவின் வெள்ளம் (விளங்கியது)

தலை ஏழாம்   வேற்றுமைப்   பொருளில்   வந்தது.   வேண்டுதல்;
விரும்புதல்.

அணை   வேண்டுதல் என்பது குரங்குச் சேனைக்குச் செல்லும்போது
அணை    கட்ட    விரும்பியதையும்.    ஆற்று     வெள்ளத்துக்குச்
செல்லும்போது  அணை  கட்ட  வேண்டிய நிலையையும்   பொருத்திக்
காண்க.   இலை   முதல்   பொருள்;  இலை.  முதலானவை   ஆற்று
வெள்ளத்தில் ஈர்த்து வரப்படுபவன. குரங்குகளுக்கு உணவாவன.     9
 
                                          குடிகாரர் :வெள்ளம்
 

21.

ஈக்கள் வண்டொடு மொய்ப்ப. வரம்பு இகந்து
ஊக்கமே மிகுந்து. உள் தெளிவு இன்றியே.
தேக்கு எறிந்து வருதலின். - தீம் புனல் -
வாக்கு தேன் நுகர் மாக்களை மானுமே.