பக்கம் எண் :

18பால காண்டம்  

தீம்புனல் -   இனிய     நீர்ப்பெருக்கு;   ஈக்கள்    வண்டொடு
மொய்ப்ப
-ஈக்கள்  வண்டுகளோடு சேர்ந்து மொய்த்திட; வரம்பு இகந்து
-  அணை  கடந்து  ஒழுகலாற்று  எல்லையை மீறி; ஊக்கம்  மிகுந்து-
எழுச்சி  பெருகி  (உற்சாகம்  மிகுந்து)  உள்    தெளிவு   இன்றியே  -
உள்ளிடத்து  (உள்ளத்திலே)  தெளிவே  இல்லாமல்;  தேக்கு  எறிந்து
வருதலின்
-தேக்கு  மரங்களை மோதி இழுத்து வருதலால் /  ஏப்பமிட்டு
வருவதால்; தேன் நுகர் மாக்களை மானும்.

ஈக்களும்      வண்டுகளும்  மொய்ப்பது குடிகாரரிடத்து எழும் கள்
நாற்றம்  காரணமாக.  ஆற்று  வெள்ளம் கரை கடப்பதையும்.  குடிகாரர்
ஒழுக்க  எல்லையைக்    கடப்பதையும்  ‘வரம்பு இகந்த’ என்ற தொடர்
சுட்டிற்று.    ஊக்கம்:     வெள்ளத்துக்கு    வேகமும்     குடியருக்கு
எழுச்சியையும்   குறித்தது.    உள்  தெளிவு  இன்மை;  வெள்ளத்தின்
உட்புறம்  கலங்கியிருப்பது;    மனத்திலும்  அறிவிலும்   தெளிவின்மை
குடியரிடம்  இருப்பது.  தேக்கு    மரங்களை  வீழ்த்தி  இருத்திவருவது
வெள்ளம்;  ஏப்பமிட்டுக்  கொண்டு   வருவது. தேக்கெறிதல். தேன்-கள்.
வாக்கு தேன்-வினைத்தொகை.

‘மஞ்சுலாம்     சோலை’ என்று    தொடங்கும் பெரிய திருமொழிப்
பாசுரத்தின்     வியாக்கியானத்தில்         இப்பாடலின்     முதலடி
பெரியவாச்சான்பிள்ளையால் எடுத்தாளப்பட்டது.                  10
 
                                      கடலொடு போர் செய்ய...
 

22.

பணை முகக் களி யானை பல் மாக்களோடு
அணி வகுத்தென ஈர்த்து. இரைத்து ஆர்த்தலின்.
மணி உடைக் கொடி தோன்ற வந்து ஊன்றலான்.
புணரிமேல் பொரப் போவது போன்றதே.

 

பனை  முகக்  களி  யானை- பருத்த முகமும் களிப்பும் கொண்ட
யானைகள்; பல   மாக்களோடு  அணி  வகுத்தென  ஈர்த்து-  பல
விலங்குகளோடு   அணிவகுத்தது  போல இழுத்துக் கொண்டு; இரைந்து
ஆர்த்தலின்
-  ஆரவாரத்தோடு முழங்குதலாலும்; மணி உடைக் கொடி
தோன்ற
- அழகான கொடிகள் தோன்றுமாறு; வந்து ஊன்றலால்- வந்து
தோன்றுதலாலும்;  புணரி  மேல்  பொர- கடலின்மீது படையெடுத்துப்
போர்  செய்ய  போவது  போன்றது-செல்வது போலச் சரயு வெள்ளம்
காணப்பட்டது.

பொருத்தம்     நோக்கிச் ‘சரயு வெள்ளம்’ என்ற எழுவய் வருவித்து
உரைக்கப்பட்டது. பொருதலை விளக்குவன யானை. பல்வகை   மாக்கள்
(குதிரைகள்)   முழக்கம்.   கொடி  ஆகியவை.  சரயுவின்    வெள்ளப்
பெருக்கில்   யானையும்   பல்வகை   விலங்குகளும்    ஆரவாரிக்கும்
ஒலியோடு   ஈர்க்கப்படுவதாக   விளங்கிக்  கொள்க;   இடையிடையே
தாவரக் கொடிகளும் காணப்படுவது இயற்கை.                    11
 
                          
சரயு: அதன் தன்மையும் போக்கும்