பக்கம் எண் :

20பால காண்டம்  

   

கடுக்கை. ஆர். வேங்கை. கோங்கு.
   பச்சிலை. கண்டில் வெண்ணெய்
அடுக்கலின் அடுத்த தீந் தேன்.
   அகிலொடு நாறும் அன்றே.

 

கொடிச்சியர்     இடித்த  சுண்ணம்- குறிஞ்சி நிலத்துப் பெண்கள்
இடித்த   மணப்  பொடியினையும்;   குங்குமம். கோட்டம்.   ஏலம்-
குங்குமப்பூ.    கோட்டம்.    ஏலக்காய்;  நடுக்குறு   சந்தம்-    தன்
குளிர்ச்சியால்  உடலை  நடுங்கச் செய்கின்ற சந்தனம்;  சிந்தூரத்தொடு.
நரந்தம்.  நாகம்
-  வெட்சிப் பூ. நரந்தம். புல். சுரபுன்னைப்;  கடுக்கை.
ஆர்  வேங்கை.  கோங்கு
-கொன்றை.  ஆத்தி.  வேங்கை.  கோங்கம்;
பச்சிலை.  கண்டில்  வெண்ணெய்
-பல்வகைப்  பச்சிலைகள்.  கண்டில்
வெண்ணெய்  என்னும்   பூண்டு;  அடுக்கலின்  அடுத்த  தீந்தேன்-
மலையில்  கட்டப்பட்ட  இனிய தேன்கூடு; அகிலொடு - அகில்-அகில்
கட்டை    ஆகியவற்றையும்    இழுத்து  வருவதால்;  நாறும்-சரயுவின்
வெள்ள    நீர்   மேற்குறித்த  பொருள்களின்  மணத்தைக்   கொண்டு
இயங்கும்.

‘சரயுவின்   வெள்ள     நீர்’    என்ற    எழுவாய்    வருவித்து
உரைக்கப்பட்டது. அன்று. ஏ அசைகள்.                         13
 
                                          வெள்ளம்; சேனை
 

25.

எயினர் வாழ்சீறூர் அப்பு
   மாரியின் இரியல் போக்கி.
வயின் வயின். எயிற்றி
   மாதர். வயிறு அலைத்து ஓட. ஒட்டி.
அயில்முகக் கணையும் வில்லும்
   வாரிக்கொண்டு. அலைக்கும் நீரால்.
செயிர் தரும்கொற்ற மன்னர்
   சேனையை மானும் அன்றே.                    14
 

எயினர்     வாழ் சீறூர் -  (சிறிய ஊரில் வாழ்கின்ற வேடர்களை
(மக்களை);  அப்பு  மாரியின்- அம்பு  மழையால்;  இரியல் போக்கி-
ஓடச்  செய்தும்; வயின் வயின்- எல்லா இடங்களிலும்; எயிற்றி மாதர்-
வேடுவப் பெண்கள்; வயிறு அலைத்து  ஓட ஒட்டி-வயிற்றில் அடித்துக்
கொண்டு ஓடும்படி விரட்டியும்; அயில்முகக்  கணையும் - கூர்மையான
முனை    கொண்ட    அம்புகளையும்;     வில்லும்-   விற்களையும்;
வாரிக்கொண்டு
-வாரி வந்து; அலைக்கும் நீரால்- அலையச் செய்கின்ற
தன்மையால்; (சரயுவின் வெள்ளம்)  செயிர் தரும் கொற்ற மன்னர்-
போர் செய்து வெற்றி பெற்ற உரிய மன்னர்களின்; சேனையை மானும்-
படையைப் போன்றது.