பக்கம் எண் :

  ஆற்றுப் படலம்21

அப்பு     மாரி;   அம்பு  மழை என்னும் போது அப்பு வலித்தல்
விகாரம்;  வெள்ளத்தைக்    குறிக்கும்போது  அப்பு:  நீர்  (வட சொல்).
அப்பு  மாரி;  உருவகம்.    சிலேடை. செயிர் அறும் கொற்றம் என்னும்
பாடம்; குற்றமற்ற வெற்றி என்று பொருள். அன்று. ஏ அசைகள்.     14

 
                                   கண்ணன் : வெள்ளம்
 

26.

செறிநறுந் தயிரும். பாலும்.
   வெண்ணெயும். சேந்த நெய்யும்.
உறியொடு வாரி உண்டு.
   குருந்தொடு மருதம் உந்தி.
மறிவிழி ஆயர் மாதர்
   வனைதுகில் வாரும் நீரால்.
பொறிவரி அரவின் ஆடும் 
   புனிதனும் போலும் அன்றே.

 

செறி    நறுந்தயிரும்- தொய்ந்து இறுகிய மணம் மிக்க தயிரையும்;
பாலும். வெண்ணெயும்.  சேந்த நெய்யும்
- பால். வெண்ணெய். சிவந்த
நெய்   ஆகியவற்றையும்;   உறியொடு   வாரி  உண்டு-  அவற்றைத்
தாங்கியிருந்த  உறிகளொடு  கவர்ந்து  உண்டு;  குருந்தொடு  மருதம்
உந்தி
- குருந்த  மரத்தோடு  மருத மரத்தையும் முறித்துத்    தள்ளி;மறி
விழி   ஆயர்  மாதர்
-  மானின்  விழி  போன்ற  விழிகள்  உடைய
இடைக்குலப்  பெண்கள்;  வனை  துகில்- உடுத்துகின்ற  ஆடைகளை;
வாரும்  நீரால்
-  ஈர்க்கின்ற  (தண்ணீரால்)  தன்மையால்; பொறி வரி
அரவின்  ஆடும்
- புள்ளிகளையு  வரிகளையும் கொண்ட (காளியன்கன்
என்ற)  பாம்பின்மேல்  ஆடிய;   புனிதனை  மானும்-  தூய  கண்ண
பெருமானை (அந்த சரயு வெள்ளம்) ஒத்திருக்கும்.

செறி     தயிர்.  நறுந்தயிர்      எனப்  பிரித்துக்  கூட்டுக.  செறி
தயிர் - வினைத்தொகை;   நறுந்தயிர்- பண்புத்  தொகை.  உறியிலிருந்து
தனித்தனியாக  எடுக்காமல் உறியோடு  மொத்தமாகக்  கவர்ந்த செயலை
‘உறியொடு’  என்ற  சொல்லாட்சி   குறித்தது.  மறிவிழி   மருளுதலைக்
குறித்தது.   வனை    துகில்;  வினைத்தொகை.   வனைதல்   அழகுற
அணிதல்.  அரவின்  ஆடியது-காளிங்க   நர்த்தனக்   கதை  குறித்தது.
‘இயல்பிலேயே’  குற்றத்தின்   நீங்கியவனாதலின் கண்ணனைப்  புனிதன்
என்றார்.

புராணச் செய்திகளைக்  கற்பனை உத்தியாகக் கொள்வதை இக்காலத்
திறனாய்வாளர் ‘தொன்மம்’ என்பர்.                           15

                                           யானை: வெள்ளம்
 

27.

கதவினை முட்டி. மள்ளர்
   கைஎடுத்து ஆர்ப்ப எய்தி.
நுதல்அணி ஓடை பொங்க.
   நுகர்வரி வண்டு கிண்ட.