பக்கம் எண் :

  ஆற்றுப் படலம்25

‘எல்லைஇல் மறைகளாலும் இயம்ப
   அரும் பொருள்ஈது’ என்னத்
தொல்லையில் ஒன்றேஆகி.
   துறைதொறும். பரந்த சூழ்ச்சிப்
பல்பெரு சமயம் சொல்லும்
   பொருளும்போல். பரந்து அன்றே. 

 

கல்லிடைப் பிறந்த போந்து- இமய மலையில் தோன்றி அங்கிருந்து
வந்து;  கடலிடைக்  கலந்த  நீத்தம்-கடலிலே  கலந்துவிட்ட சரயுவின்
வெள்ளமானது;  ‘எல்லை  இல்  மறைகளாலும்-  அளவிட  முடியாத
வேதங்களாலும்;  இயம்ப    அரும்    பொருள்   ஈது’   என்ன-
சொல்லுதற்கரிய     பரம்பொருள்  (போன்றது)  இவ்வெள்ளம்’  என்று
கூறுவதற்கு  ஏற்றபடி; தொல்லையில்  ஒன்றே  ஆகி-  ஆதிமுதலில்
ஒன்றாகவே  இருந்து;  துறைதொறும்- ஏரி குளம் முதலிய  வேவ்வேறு
இடங்களிலெல்லாம்; பரந்த-  விரிந்த;  சூழ்ச்சிப் பல்பெருஞ் சமயம்-
ஆராய்ச்சியுடைய  பல்வேறு சமயவாதிகள்; சொல்லும் பொருள்போல்-
விளக்கி உரைக்கின்ற பரம்பொருள் போல; பரந்தது- பரவியது.

பரம்பொருள்     ஒன்று; அதுபோல வெள்ளநீரும் ஒன்றே. பல்வேறு
சமய.    தத்துவங்களின்      கருத்துக்கு    ஏற்பப்   பரம்பொருளும்
வெவ்வேறு  நாம.  ரூப  பேதங்களாக  விளகங்குகிறது;  அதுபோலவே
வெள்ளநீரும்  ஏரி.  குளம்.    கால்வாய்  போன்ற பல இடங்களில் பல
பெயர்களால் பரந்து செல்கிறது.

கல்:     (இமய  மலை;      இமயத்தை  ‘வடபெருங்கல்’  என்று
குறுங்கோழியூர் கிழார் (புறநா.17)   குறிப்பர். மதுரைக் காஞ்சி (70)யிலும்
இவ்வாட்சி காணலாம்.
 
  

வேறுபாடு சமயமெல்லாம் புகுந்து பார்க்கின்
   விளங்குபரம் பொருளேநின் விளையாட்டல்லால்
மறுபடும் கருத்தில்லை; முடிவில் மோன
   வாரிதியில் நதித்திரள் போல் வயங்கிற்றம்மா.
எனத் தாயுமானவரும் (கல்லாலின் :25)
   பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம்
புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
   கங்கு கரை காணாத கடலே.
 

என     இராமலிங்க வள்ளலாரும் (மகாதேவ மாலை 48)     இதே
கருத்தைப்    பேணியிருத்தல்    அறிந்து   மகிழத்தக்கது.     ஆற்று
வெள்ளமும்  கடல்பரப்பும்  பொதுப் படிமங்களாக    இப்பெருமக்களின்
வாக்கிலே அமைவதை உணர்க. கம்பர்தம் சமய தத்துவங்களை   உணர
உதவும் பாடல்களில் இது மதிப்புமிக்க ஒரு பாடலாகும்.            19
 
                                      உயிர். மெய்; வெள்ளம்
 

31.

தாது உகு சோலைதோறும்.
   சண்பகக் காடுதோறும்.