பக்கம் எண் :

28பால காண்டம்  

அன்பு      என்னும்     மதுவைப் பருகி; மூங்கையான் பேசலுற்றான்
என்ன
-  ஊமையே   பேசத் தொடங்கிவிட்டான் என்றாற் போல; யான்
மொழிய லுற்றேன்
- நான் பேசலானேன்.

வான்மீகி     பாடிய சுலோகத்தில்     எந்த வரியையும் எடுத்துவிட
முடியாது என்பார் வாங்க அரும் பாதம்   என்றார்; அத்துணைச் செறிவு
மிக்கது  வான்மீகியின்  வாக்கு  என்பது.    பாதம்:  (இங்கே) பாட்டின்
அடிகள்.  வான்மீகிக்கு  முன்னர்  நான்கு    அடி  கொண்ட சுலோகம்
இல்லை  யாதலின்  அவ்வாறு  முதலில்    கவி  செய்தமையால் அவர்
ஆதிகவி    எனப்பட்டார்    என்பர்.    என்பான்:   எனப்பட்டவன்;
செயப்பாட்டு வினை.

தேவரும்-உயர்வு     சிறப்பும்மை.    ‘பருக’ என்ற சொல்லாட்சிக்கு
ஏற்பகச்   ‘செவி   வாயாக’  எனவும்   தேவர்கள்  பருகியதாகக்  கவி
கூறியதற்கு   ஏற்பக்   கவியமுதம்    எனவும்  உருவகப்படுத்தி  உரை
கூறப்பட்டது.  வான்மீகத்தின்  பயன்    கூறுமிடத்துத் தேவரும் கேட்டு
மகிழ்ந்ததாகக்    குறிக்கப்பட்டிருப்பதாகக்     கூறுவர்.   ஆதிகவியை
நினைந்தபோது  கம்பருக்கு  அடக்க   உணர்வு முகிழ்த்ததை இப்பாடல்
உணர்த்துகிறது.   அன்பெனும்     நறவம்-உருவகம்.  கள்  உண்டவன்
சொல்போலப்   போதை   நிறைந்த   கவிச்  சொல்  பிறந்ததை  நாம்
உணரலாம்.  கள்ளுக்குச்  ‘சொல்விளம்பி’   என்று   ஒரு  பெயருண்டு.
கவிஞரா  பேசுகிறார்?  இல்லை.  உள்ளேயுள்ள    அன்பெனும் நறவம்
பேசுகிறது!

கோசல நாட்டு  வளம்  இப்பாடலில் பொதுவாக. பேசப்பட்டது; இனி.
விளக்கமாகப் பேசும். அடுத்த பாடல்.                          1
 
 

33. 
 

வரம்பு எலாம் முத்தம்; தத்தும்
   மடை எலாம் பணிலம்; மா நீர்க்
குரம்பு எலாம் செம் பொன்; மேதிக்
   குழி எலாம் கழுநீர்க் கொள்ளை;
பரம்பு எலாம் பவளம்; சாலிப்
   பரப்பு எலாம் அன்னம்; பாங்கர்க்
கரம்பு எலாம் செந் தேன்; சந்தக்
   கா எலாம் களி வண்டு ஈட்டம்.
 

வரம்பு   எலாம்  முத்தம்-(வயல்) வரப்புகளிலெல்லம் முத்துக்கள்;
தத்தும்  மடை எலாம் பணிலம்
- தண்ணீர் பாயும் மடைகளிலெல்லாம்
சங்குகள்; மாநீர்க்   குரம்பு   எலாம்  செம்பொன்-  மிகுந்த  நீர்ப்
பெருக்குடைய  செய்கரை  களிலெல்லாம்  செம்பொன்;  மேதிக்  குழி
எலாம் கழுநீர்க் கொள்ளை
- எருமைகள் படிகின்ற பள்ளங்களிலெல்லாம்
செங்கழுநீர்  மலர்கள்; பரம்பு எலாம் பவளம்- பரம் படித்த இடங்களி
லெல்லாம் பவளங்கள்;  சாலிப்  பரப்பு  எலாம் அன்னம்- நெற்பயிர்
நிறைந்த   பரப்புகளிலெல்லாம்    அன்னங்கள்;  பாங்கர்-  அவற்றின்
பக்கங்களில்  இருக்கின்ற;   கரம்பு   எலாம்   செந்தேன்-  சாகுபடி
செய்யப்படாத  நிலங்களி  லெல்லாம்  செந்தேன்;  சந்தக்  கா எலாம்
களிவண்டு ஈட்டம்
- அழகிய சோலைகளிலெல்