பக்கம் எண் :

30பால காண்டம்  

   

வண்டுகள் இனிது பாட. -
   மருதம் வீற்றிருக்கும் மாதோ.
 

தண்டலை    மயில்கள் ஆட- சோலைகளிலே மயில்கள் ஆடவும்;
தாமரை  விளக்கம்  தாங்க
-  தாமரை  மலர்கள்  விளக்குகளை ஏந்தி
நிற்கவும்;  கொண்டல்கள் முழவின் ஏங்க- மேகங்கள் மத்தளம் போல
ஒலிக்கவும்;  குவளை  கண்  விழித்து நோக்க- குவளைக் கொடிகளில்
மலர்கள்  கண்போல்  விழித்துப்  பார்க்கவும்;  தெண்  திரை  எழினி
காட்ட
-  நீர்நிலைகளின்    அலைகள்  திரைச்சீலை போலக் காட்டவும்;
தேம்  பிழி  மகர  யாழின்
-  தேனை  ஒத்த மகர யாழ் இசை போல;
வண்டுகள் இனிது பாட
- வண்டுகள் இனிமையாகப் பாடவும்; (இவ்வாறு
இசையும் கூத்தும்  பொலிகின்ற  அரங்கிலே)-  மருதம் வீற்றிருக்கும்-
மருத நாயகி வீறு தோன்ற அமர்ந்திருப்பது போன்றிருந்தது.

உரையாசிரியர்கள்     பிறரெல்லாம் மருத வேந்தன் என்றனர்; அது
பொருத்தமே.  எனினும்.  இயற்கையை    அன்னை  எனப்  போற்றும்
மரபினை        ஓம்பி          இங்கே     மருதம்     நாயகியாக
உரைக்கப்பட்டது.”.......எதிரே    கொலு  வீற்றிருக்கும்  அரசி  மருதாயி
நாச்சி  இக்காட்சியைக் கண்டு  களிக்கிறாள்” என்பர் பேரா. அ. ச. ஞா.
(கம்பன்  கலை  -  பக்.4).    “இந்த  இடத்தில்  கவிஞன்  கையாளும்
உவமை.   இயல்புக்கும்     மரபுக்கும்  ஒத்துக்  கற்போர்க்கு  இன்பம்
பயப்பதாகும்.   கொண்டல்    முழங்கின்   மயில்   ஆடும்;  குவளை
மலர்ந்திருக்கும்   மாலைப்    போதில்  தாமரை  குவிந்துவிடும்.  இந்த
இயல்பு  பிறழாமல்     முறைப்படுத்தும்  கவிஞன் திறன் துய்ப்பார்க்குச்
சுவை ஊட்டுமன்றோ?” (பக்.5)

தண்டலை;  சோலை. குளிர்ந்த இடம் (தண் + தலை) என்ற பொருள்
உடையதாய்ப்     பண்புத்        தொகைப்     புறத்துப்     பிறந்த
அன்மொழித்தொகை.   குவளைக்   கண்  என்பது  எதுகை  நோக்கிக்
குவளை  கண்  என நின்றதாகக்  கொண்டு பொருள் கூறுதலும் உண்டு.
யாழ்: யாழிசைக்கு ஆகுபெயர்.                               4
 
 

36.

தாமரைப் படுவ. வண்டும்
   தகை வரும் திருவும்; தண் தார்க்
காமுகர்ப் படுவ. மாதர்
   கண்களும் காமன் அன்பும்;
மா முகில் படுவ. வாரிப்
   பவளமும் வயங்கு முத்தும்;
நாமுதல் படுவ. மெய்யும்
   நாம நூல் பொருளும் மன்னோ.
 

வண்டும்  தகை  வரும் திருவும்- வண்டுகளும் அழகு வளர்கின்ற
திருமகளும்;   தாமரைப் படுவ- தாமரை மலர்களில் தகியிருப்பனவாம்;
மாதர் கண்களும் காமன் அன்பும்
- விலைமாதர் கண்களும் மன்மதன்
அம்புகளும்;  தாண்தார்க்  காமுகப் படுவ- குளிர்ந்த மாலை அணிந்த
காமுகர்களை தாக்குவனவாம்;  வாரிப்  பவளமும்  வயங்கு முத்தும்-
கடலில்  விளையும்     பவளமும்  ஒளியால் விளங்குகின்ற முத்துகளும்;
மாமுகில் படுவ
- கார்மேகங்களில் தங்குவனவாம்; மெய்யும் நாம நூல்
பொருளும்
- உண்மையும் புகழ் வாய்ந்த நூல்கள்