பக்கம் எண் :

  நாட்டுப் படலம்31

கூறும்    பொருளும்:  நா  முதல்  படுவ-  கோசல  நாட்டு  மக்களின்
நாவிலே தங்குவனவாம்.

தாக்கப்பெறுவோர்     காமுகராக கூறப்படுதலின்    ‘மாதர்’ இங்கே
விலைமாதர்  எனப்  பொருள்பட்டது.  கடல்  நீரைப்  பருகிய   மேகம்
உடன்   பவளங்களையும்   முத்தையும்     கொண்டன;  மன்னுயிர்க்கு
இன்றியமையா  நீரைப்  பொழிந்துவிட்டுப்   பவளத்தையும்  முத்தையும்
தன்னிடத்து      வைத்துக்கொண்டது.   கோசல      நாட்டு   மக்கள்
வாய்மையுடையவர்.    நண்ணூற்  பொருளே  நவில்வர்  என்ற கருத்து
மிகவும்    பேணத்தக்கது.     ‘படுவ’   -   சொற்பொருட்   பின்வரு
நிலையணியாக வந்தது.                                      5
 

37.

நீரிடை உறங்கும் சங்கம்;
   நிழலிடை உறங்கும் மேதி;
தாரிடை உறங்கும் வண்டு;
   தாமரை உறங்கும் செய்யாள்;
தூரிடை உறங்கும் ஆமை;
   துறையிடை உறங்கும் இப்பி;
போரிடை உறங்கும் அன்னம்;
   பொழிலிடை உறங்கும் தோகை.
 

சங்கம்     நீரிடை    உறங்கும்-      சங்குகள்    தண்ணீரில்
உறங்கிக்கொண்டிருக்கும்;  மேதி நிழலிடை உறங்கும்- எருமைகள் மர
நிழலில்  உறங்கிக்   கொண்டிருக்கும்;  வண்டு  தாரிடை  உறங்கும்-
வண்டுகள்    மலர்  மாலைகளிலே உறங்கிக்கொண்டிருக்கும்; செய்யாள்
தாமரை  உறங்கும்
-  திருமகள்  (பெயர்தலின்றித்)  தாமரை  மலரிலே
உறங்குவாள்;   ஆமை  தூறிடை  உறங்கும்-  ஆமைகள்  சேற்றிலே
உறங்கும்; இப்பி துறையிடை உறங்கும்;   முத்துச்   சிப்பிகள்   நீர்த்
துறைகளிலே உறங்கும்; அன்னம் போரிடடை உறங்கும்- அன்னங்கள்
நெற்போரிலே  உறங்கிக் கிடக்கும்;  தோகை  பொழிலிடை உறங்கும்-
மயில்கள் சோலைகளிலே உறங்கிக் கொண்டிருக்கும்.

பிறர்     இடையியீடின்றி நிம்மதியாக யாவும் தூங்குகின்றன. கவலை
யின்றி. அச்சமின்றி. நிலை மாற்றமின்றித்    தூங்குகின்றன. மலர் மாலை
அணிந்தோர்   நடமாடிக்   கொண்டிருந்தாலும்    அம்  மாலைகளிலே
வண்டுகள்  உறங்குகின்றனவாம்;   பலர்   ஊடாடும் நீர்த் துறைகளிலே
முத்துச்    சிப்பிகள்    உறங்குகின்றன - இவையெல்லாம்    எவ்வகை
இடையீடும்       இல்லாமல்       பெறுகின்ற        நிம்மதியையும்
அச்சமின்மையையும்   குறித்தன.    முன்பாட்டில் ‘வண்டும் திருமகளும்
தாமரைப் படுவ’ என்றார்; தேன்   நாடி. உண்டபின் வேறு இடம் நாடும்
வண்டோடு   திருவையும்     இணைத்துச்   சொன்னார்.   ஒரு  கால்
செல்வத்தின்       பொதுத்தன்மை    நோக்கி    அவ்வாறு    கம்பர்
கூறியிருக்கலாம்.   கோசல    நாடடில்  திருமகள்  நிரந்தரமாக;  இடம்
பெயர்தலின்றி   செல்வம்   தவறான     வழியிலே   பாயுமோ  என்ற
அச்சமின்றித்  தூங்குகிறாள்.   ‘திரு வீற்றிருந்த தீது தீர் நியமம்’ என்று
நக்கீரர் வருணித்த மாமதுரைக் கடைவீதி இங்கு நினைவில் எழும்.