பக்கம் எண் :

  நாட்டுப் படலம்33

தெள்விளிச்   சிறியாழ்ப்பாணர்- தெளிந்த இசை கொண்ட சிறிய
யாழையுடைய  பாணர்கள்;  தேம்பிழி  நறவம்  மாந்தி- இனிமையாய்
வடிக்கப்பட்ட  மதுவினைக் குடித்து; வள் விசிக் கருவி பம்ப- வாரால்
இழுத்துக்  கட்டப்பட்ட  முழவுகள்  ஒலிக்க;  வயின்  வயின் வழங்கு
பாடல்
-  ஆங்காங்கே  பாடப்படுகின்ற  பாடல்கள்;  வெள்ளி  வென்
மாடத்து  உம்பர்
-  வெள்ளை  வெளேரென  ஒளிவீசும்  மாடங்களின்
மேல்;  வெயில்   விரி   பசும்பொன்   பள்ளி-   ஒளி   உமிழும்
பசும்பொன்னாலன கட்டிலிலே (உறங்குகின்ற); எள்ள  அருங்கருங்கண்
தோகை
-   பழிப்பதற்கு   அரிய   கருமை  நிறக்    கண்களையுடைய
மயில்போலும்  மகளிரை;  இன்துயில்  எழுப்பும்-  இனிய  உறக்கத்தி
லிருந்து எழுப்பும்.

‘வயின்   வயின் வழங்கு பாடல் துயில் எழுப்பும்’ என வினை முடிபு
கொள்க. பாணர்கள் பாடும் இசையால் துயில் நீங்குமளவு   மென்மையும்
வளமையும்    உடையவராகச்   செல்வ   மங்கையர்     கோசலத்தில்
வாழ்ந்தனர்.  எள்ள  அரும்  என்பது  யாப்பியல்  வடிவில்    அகரம்
தொக்கு எள்ளரும் என நிற்கும்.                              8
 

40.

ஆலைவாய்க் கரும்பின் தேனும்.
   அரி தலைப் பாளைத் தேனும். 
சோலை வீழ்க் கனியின் தேனும்.
   தொடை இழி இறாலின் தேனும்.
மாலைவாய் உகுத்த தேனும். -
   வரம்பு இகந்து ஓடி. வங்க
வேலைவாய் மடுப்ப - உண்டு.
   மீன் எலாம் களிக்கும் மாதோ.
 

ஆலைவாய்க்     கரும்பின்   தேனும்- கரும்பாலைகளிலிருந்தும்
பெருகும்   தேன்  போன்ற   கருப்பஞ்சாரும்;  அரிதலைப்  பாளைத்
தேனும்
-கள்  இறக்குவோர்   அரிந்த பாளையிலிருந்து வடியும் கள்ளும்
சோலைவீழ்க்  கனியின்  தேனும்-  சோலைகளில் பழுத்த   பழங்களின்
சாறும்; தொடை இழி இறாலின் தேனும்-தொடுக்கப்பட்ட இடத்தினின்று
வழிகின்ற தேனடைத் தேனும் - மாலை வாய் உகுத்த தேனும் - மலர்
மாலைகளிலிருந்து  வடியும்  தேனும்;  (ஆக இவையெல்லாம்); வரம்பு
இகந்து   ஓடி
-
எல்லை   மீறிப்   பெருகி   ஓடி;  வங்க  வேலைவாய்
மடுப்ப-கப்பல்கள்  இயங்கும்  கடலிலே  போய்ச்  சேர;   மீன் எலாம்
உண்டு    களிக்கும்
-   (கடலிலே   வந்து   கலக்கின்ற   அவற்றை)
மீன்களெல்லாம் பருகிக் களிக்கும்.
 
  

41.

பண்கள் வாய் மிழற்றும் இன்
   சொல் கடைசியர் பரந்து நீண்ட
கண். கை. கால். முகம். வாய் ஒக்கும்
   களை அலால் களை இலாமை.
உண் கள் வார் கடைவாய் மன்னர்.
   களைகலாது உலாவி நிற்பர்;-