பக்கம் எண் :

  நாட்டுப் படலம்35

கருங்கடல்   தரங்கம்- கரிய நிறத்தை உடைய கடலின் அலைகள்;
புதுப்புனல்  குடையும்  மாதர்
-  ஆற்றில்  புதுவெள்ளத்தில்  நீராடும்
மகளிரின்;  பூவொடு  நாவி  பூத்த  கதுப்பு-  மலர்களும்  கஸ்தூரிக்
கலவையும்  கமழ்கின்ற  கூந்தலின்;  உறு  வெளியே  நாறும்- மிகுந்த
மணமே     கமழும்   (என்றால்)  மைந்தர்  விதுப்பு  உற-  ஆண்கள்
விருப்பம் கொள்ள; வாள் கடைக் கண்ணின் நோக்கும்-வாள் போன்ற
கடைக்  கண்களால் (காதல் எழப்) பார்க்கின்ற; மதுப் பொதி  மழலைச்
செவ்வாய்
-  தேன்  போன்ற  குதலை மொழி பேசும்  சிவந்த வாயைக்
கொண்ட;  அன்னார்   மிகுதியை   விளம்பல்   ஆமோ-  அந்தப்
பெண்களின்    எண்ணிக்கை   மிகுதியைக்  கூற இயலுமோ? (பெண்கள்
எண்ணிக்கை மிகுதியாதலின் கூற இயலாது)

கடல்     ஆகிய பெருநீர்ப் பரப்பு சேர்ந்த ஆற்று நீர்ப் பெருக்கால்
மலர்   மணமும்     கத்தூரி   மணமுமே   மணக்க  வேண்டுமெனின்
எண்ணில்லாத  மகளிர்    ஆற்றில்  நீராடியிருக்கவேண்டும்.  இவ்வாறு
உய்த்துணர வைத்தலால் இதனை அனுமான அணி என்பர்.
 

குரும்பைவெம் முலையார் ஆடக் கூந்தலின் நறவம் 
                                       தோய்ந்த
இரும்புலன் ஆறுபாய எறிதிரை சுருட்டும் தெண்ணீர்க்
கருங்கடல் புலவு நீங்கி நறுமணம் கமழு மென்றால்.
முருந்து உறழ் மூரலார்தம் மிகுதியை மொழிய லாமோ?

 

என்ற நைடதப்   பாடலில்   கம்பர்  எதிரொலிப்பதை   உணரலாம்
(நைடதம்- நாடு. 11)

வெறியே - ஏகாரம் தேற்றம்; கடைக்கண் (கண்ணின்கடை) - முன்
பின்னாகத் தொக்கது விளம்பலாமோ - ஓகாரம் எதிர்மறை.         11
 

43.

வென் தளக் கலவைச் சேறும்.
   குங்கும விரை மென் சாந்தும்.
குண்டலக் கோல மைந்தர் குடைந்த.
   நீர்க் கொள்ளை. சாற்றின்.
தண்டலைப் பரப்பும். சாலி
   வேலியும் தழீஇய வைப்பும்.
வண்டல் இட்டு ஓடு மண்ணும் -
   மதுகரம் மொய்க்கும் மாதோ.
  

வெண்தளக்     கலைச் சேறும்- பச்சைக் கற்பூரம் கலந்த சாந்தும்;
குங்கும  விரை  மென்  சாந்தும்
-  குங்குமப்  பூ  முதலியன  கலந்த
சந்தனமும்  பூசிய;  குண்டலக்  கோல மைந்தர்- குண்டலம் அணிந்த
அழகிய  ஆண்கள்; குடைந்த நீர்க் கொள்ளை- முழுகி நீராடிய அந்த
வெள்ளப்   பெருக்கை;   சாற்றின்-   சொல்லுவதாயின்;  தண்டலைப்
பரப்பும்
-   சோலைப்   பரப்புகளிலும்;  சாலி  வேலியும்-  நெற்பயிர்
விளையும்  வயல்களிலும்;   தழீஇய வைப்பும்- அவற்றைச் சார்ந்துள்ள
நிலப்  பகுதிகளிலும்; வண்டல்  இட்டு  ஓடும்  மண்ணும்-  வண்டல்
படியும்படி  (நீர்)    ஓடும்  ஏனைய  மண்  பகுதிகளிலும்;  மது  கரம்
மொய்க்கும்
- வண்டுகள் மொய்த்துக் கொண்டிருக்கும்.