பக்கம் எண் :

38பால காண்டம்  

இசைப்      பயன்   துய்ப்பாரும்-  இயல் இசைத்த இசைப்பாடலை
அனுபவிப்பவர்களும்;  மருந்தினும்  இனிய- அமுதத்தை விட இனிமை
மிக்க;  கேள்வி  செவி உற மாந்துவாரும்- கேட்டறியும் நூலறிவினைச்
செவியிற்  பொருந்த  உண்டு அனுபவிப்பவர்களும்; விருந்தினர் முகம்
கண்டு
-  விருந்தினரின்  முகத்தைப்  பார்த்து;  அன்ன  விழா அணி
விரும்புவாரும்
-   உண்ணும்  சோறு  வழங்கும்  விழாவின்  சிறப்பை
விரும்புவாரும்

இச்     செய்யுளோடு     வாக்கியம் முற்றுப் பெறவில்லை;  மேலும்
தொடர்கிறது    (49 முடிய). இப்படி வரும் செய்யுளைக் குளகச் செய்யுள்
என்பர். ஆணுக்கும்   பெண்ணுக்கும் உரிய பொருத்தங்கள் பத்து என்று
தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. (தொல். பொருள்-பொருளியல் 25)
 

பிறப்பே. குடிமை. ஆண்மை. ஆண்டொடு.
உருவு. நிறுத்த காம வாயில்.
நிறையே. அருளே. உணர்வொடு. திரு என
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே

 

என்பது   தொல்காப்பிய விதி. இவ்வாறு கொள்ளாமல் தினம். கணம்.
மகேந்திரம்.    ஸ்திரீ தீர்க்கம். யோனி. ராசி. ராசியதிபதி. வசியம். ரச்சு.
வேதை  எனச்   சோதிட நூலார் கூறுவனவற்றைக் கொள்வாரும் உளர்.
பருந்தும்  நிழலும்   போலப் பாட்டும் (சாகித்தியம்) இசையும் (சங்கீதம்)
பொருந்திச்   செல்ல   வேண்டும்;   இலக்கணம்    (இயல்)  அமைந்த
இசையை  நுகர்வோர்  அவ்விசையொடு    கலந்து  அனுபவிப்பதற்குப்
பருந்தும்  நிழலும்  உவமையாகக் கொள்ளலும்   பொருத்தமே. மருந்து:
அமிர்தம்.  ‘கற்றில  னாயினும்  கேட்க’  என்றும்   ‘கற்றலிற் கேட்டலே
நன்று’  என்றும்  கேள்விச்  செல்வம்  சிறப்பிக்கப்படுதலின்    ‘இனிய
கேள்வி’ என்றார்.                                         15
 
  

47.  

கருப்புறு மனமும். கண்ணில்
   சிவப்புறு சூட்டும் காட்டி.
உறுப்புறு படையின் தாக்கி;
   உறு பகை இன்றிச் சீறி.
வெறுப்பு இல. களிப்பின் வெம் போர்
   மதுகைய. வீர வாழ்க்கை
மறுப்பட ஆவி பேணா வாரணம்
   பொருத்துவாரும்;
 

கறுப்புறு   மனமும்- சினம் மிகுந்த மனமும்; கண்ணில் சிவப்புறு
சூட்டும்
-   கண்களைவிடச்   சிவந்த   கொண்டையையும்;  காட்டிப்-
புலப்படுத்தி; உறுப்புறு படையின் தாக்கி- காலில் கட்டிய கத்தியினால்
எதிர்க்கும்  சேவலைத்  தாக்கி;  உறு  பகை  இன்றிச் சீறி- தமக்குள்
முன்பகை இல்லாமலே சினம் காட்டி; வெறுப்பு இல- போர் செய்வதில்
வெறுப்பு இல்லாதவனாய்; வீர வாழ்க்கை மறுப்பட- வீர வாழ்க்கைக்கு
மாசு உண்டாகுமாயின்; ஆவி பேணா-