பக்கம் எண் :

  நாட்டுப் படலம்39

உயிரையும்    பெரிதாகப்     போற்றாத;   வாரணம்-   சேவல்களை;
பொருத்துவாரும்
- போரிடும்படிச் செய்பவர்களும்.....

கறுப்பு:     சினம். ‘கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள்’  என்பது
தொல்காப்பியம்.  (தொல்.  சொல்.  உரி. 74). சூடு: சேவல்   கொண்டை
உறுப்பு:  இங்கே  கால்களாகிய  உறுப்பு. உறுப்புறு படை   என்பதற்குக்
கால்களும்   மூக்கும்   ஆகிய  உறுப்புகள்  என்றும்    கொள்ளலாம்.
‘காலாயுதம்’ என்றே சேவலுக்கு ஒரு பெயருண்டு.                16
 

48.

எருமை நாகு ஈன்ற செங் கண்
   ஏற்றையோடு ஏற்றை. ‘சீற்றத்து
உரும் இவை’ என்னத் தாக்கி.
   ஊழுற நெருக்கி. ஒன்றாய்
விரி இருல் இரண்டு
   கூறாய் வெகுண்டன; அதனை நோக்கி.
அரி இனம் குஞ்சி ஆர்ப்ப.
   மஞ்சுகிற ஆர்க்கின்றாரும்;
  

எருமை   நாகு  ஈன்ற-  பென்  எருமைகள்  பெற்ற;  செங்கண்
ஏற்றையோடு ஏற்றை
- சிவந்த கண்களை உடைய கடாவோடு மற்றொரு
கடா; ‘சீற்றத்து உரும்  இவை’  என்னத்  தாக்கி- ‘கோபம் கொண்ட
இடிகள்  இவை’  என்று  சொல்லும்படியாக  மோதி; ஊழுற நெருக்கி-
முறையாக   நெருங்கி;  ஒன்றாய்   வீரி   இருள்-  எங்கணும்  ஒரே
பொருளாய்  விரிந்திருக்கின்ற இருட்பிழம்பு; இரண்டு கூறாய்- இரண்டு
பகுதிகளாகப்  பிரிந்து நின்று; வெகுண்டன- ஒன்றோடு ஒன்று  கோபம்
கொண்டு  பொருதன;  அதனை  நோக்கி-  அந்தப் போரைக் கண்டு;
குஞ்சி  அரி  இனம்  ஆர்ப்ப
-  தலை முடியில் அணிந்த மலர்களில்
இருந்த  வண்டுகளின் கூட்டம் (கலைந்து) ஆரவாரம்   செய்யும்படியாக;
மஞ்சு  உற  ஆர்க்கின்றாரும்
-  தமது  குரல்  மேகமண்டலம்  வரை
செல்லும்படி ஆரவாரம் செய்பவர்களும்.... 

எங்கும்  பரவியுள்ள ஒரே பிழம்பு இரண்டு கூறாகப் பிரிந்து தம்முள்
மோதுவது  போல எருமைக் கடாக்கள் காணப்படுகின்றன.   ஒரே நிறம்.
ஒரே  தரம்; உருவம் மட்டுமே இரண்டு. அவை மோதிப்  பொருவதைப்
பார்த்து  வீரர்கள்  மகிழ்ந்து ஆர்ப்பரிக்கின்றனர்.   எருமையில் பெண்
நாகு  என வழங்கும். ‘எருமையும் மரையும் பெற்றமும்   நாகே’ (தொல்
பொருள். மரபு 63). எருமை நாகு; இருபெயரொட்டுப்   பண்புத் தொகை.
ஈற்றை என்பதில் ஐகாரம் சாரியை.                            17
 
  

49. 

முள் ளரை முளரி வெள்ளி
   முளை இற. முத்தும் பொன்னும்
தள்ளுற. மணிகள் சிந்த.
   சஞ்சலம் புலம்ப. சாலில்