பக்கம் எண் :

62பால காண்டம்  

பொற்பின்  நின்றன  பொலிவு    -  (அந்த  நாட்டு  மக்களின்)
அகத்தழகால்   நிலைத்திருந்தது   புறத்தழகு;   பொய்யிலா  நிற்பின்
நின்றன நீதி
- அவர்களது பொய்ம்மை இல்லாத  மெய்ந்நிலையால் நீதி
நிலைத்து  நின்றது; மாதரார்  அற்பின்  நின்றன  அறங்கள்- (அந்த
நாட்டுப்)   பெண்களின்     அன்பால்  அறங்கள்  நிலைபெற்றிருந்தன;
அன்னவர்  கற்பின் நின்றன காலமாரியே
-அப்பெண்களது கற்பினால்
பருவமழை நிலைத்திருந்தது.

அந்நாட்டு     மக்கள் அழகெனக்     கருதுவது நற்குணத்தினையே
என்பதால்  ‘பொற்பின்  நின்றன பொலிவு’   என்றார். பொய்யிலா நிற்பு:
மெய்ந்நெறி  நிற்றல்  அன்பு: “அறத்திற்கே   அன்பு சார்பென்ப” என்ற
குறளுக்கேற்ப  “அற்பின்  நின்றன  அறங்கள்”    என்றார்.  கற்புடைப்
பெண்களுக்குக்  கடவுளரும் பணி புரிவர் என்பதால்   ‘கற்பின் நின்றன
காலமாரி’ என்றார்.

இப்பாடலை     முதல்    இரண்டு அடிகள் (அருமழை வேண்டினும்
தருகிற்கும் தன்மையன் (கலி)    ஆண்களைப் பற்றியது எனவும் கடைசி
இரண்டடிகள்  பெண்களைப்  பற்றியது  எனவும்    கூறுவர். முழுவதும்
பெண்களைப் பற்றியதே என்று கூறுவதும் பொருந்தும்.           59
 

91.சோலைமா நிலம் துருவி. யாவரே
வேலை கண்டு தாம் மீள வல்லவர்?-
சாலும் வார் புனல் சரயுவும். பல
காலின் ஓடியும் கண்டது இலையே!
 

சோலை     மாநிலம் துருவி- சோலைகள் சூழ்ந்த அக் கோசல
நாட்டைத்  துருவிச் சென்று;  வேலை  கண்டு  தாம்  மீள வல்லவர்
யாவரே
-  அதன்   எல்லையைக் கண்டு மீண்டுவர வல்லவர் யாருளர்?:
சாலும்   வார்புனல்  சரயவும்-  மிகுந்த  நீரை  உடைய  அந்நாட்டு
நதியாகிய   சரயு  நதியும்;   காலின்  ஓடியும்  கண்டதில்லை-  பல
கால்வாய்களால்     ஓடிச்   சென்றும்  அந்த  நாட்டின்  எல்லையைக்
கண்டதில்லை. 

பல   கால்களால் ஓடிச் சென்றும் சரயு நதியால் காணமுடியாத அந்த
நாட்டின்  எல்லையை.    இரு  கால்களை உடைய மனிதரால் எப்படிக்
காணமுடியும்!  காணமுடியாது    என்பது  கருத்து.  இரண்டு  காலுள்ள
உயர்திணைப்   பொருள்களாலும்     பல  கால்களுள்ள  அஃறிணைப்
பொருள்களாலும்  காணக்  கூடாத    எல்லையுடைய  கோசல  தேயம்;
இராமசாமி நாயுடு உரை விளக்கம்.

வேலை: எல்லை. கால்:  வாய்க்கால். துருவி: தேடி. இதனால் கோசல
நாட்டின் பரப்பு கூறப்பட்டது.                              60
 

92.வீடு சேர. நீர் வேலை. கால் மடுத்து
ஊடு பேரினும். உலைவு இலா நலம்