நிலமகள் முகமோ திலகமோ கண்ணோ- (அயோத்தி நகரமானது) நிலமகளது முகமோ! முகத்திலணிந்த திலகமோ! அவளுடைய கண்களோ!: நிறை நெடுமங்கல நாணோ- நிறைவான நெடிய திருமாங்கலியக் கயிறோ?; இலகு பூண் முலைமேல் ஆரமோ- மார்பகங்களின் மேலணிந்து திகழும் மணிமாலையோ!; உயிரின் இருக்கையோ- அந்நில மகளின் உயிர் இருக்கும் இருப்பிடமோ?; திருமகட்கு இனிய மலர்கொலோ- திருமகளுக்கு வாழ்வதற்கினிய தாமரை மலரோ!; மாயோன் மார்பில் நன்மணிகள் வைத்த பொற் பெட்டியோ- திருமாலின் மார்பிலணியும் நல்ல மணிகள் வைக்கப்பட்ட பொன் பெட்டி தானோ!; வானோர் உலகின்மேல் உலகோ- விண்ணுலகினும் மேலான வைகுந்தமோ; ஊழியின் இறுதி உறையுளோ- யுகமுடிவில் உயிர்களெல்லாம் தங்கும் திருமாலின் திருவயிறோ?; யாதென உரைப்பாம்- வேறு எதுவென கூறுவோம்? நிலமகளின் முகம். திலகம். கண். மங்கல நாண். ஆரம் முதலியனவாக அயோத்தி நகரத்தைப் புனைந்துரைத்தார். பெண்களும் மங்கல நாண் பெருமை தருவதாதலால் “நிறைநெடு மங்கல நாண்” என்றார். சிறந்த உறுப்பான முகத்தை முதலில் கூறினார். விண்ணுலகத்தினும் சிறந்தது பரமபதமாதலின் “வானோர் உலகின் மேலுலகோ” என்றார் அருந்தி: விருப்பம். ஒரே பொருளைப் பலவிதமாகக் கற்பித்த இப்பாடல் பலபடப் புனைவணி கொண்டது. 2 ஞாயிறும் திங்களும் இமையாமல் திரிவதற்குக் காரணம் |