இடம்- இதைவிடவும் மேலான ‘இன்பம்’ உள்ள இடம்; உண்டு என உரைத்தல் ஒண்ணுமோ- உண்டு எனக் கூறஇயலுமோ?திருமால். பரமபதமாகிய மேலான இடத்தை விட்டு இங்கு வந்து அரசு செய்த இடம் என்றால் இதனினும் போகம் நுகருமிடம் வேறு ஒன்று உண்டென உணர்த்தல் இயலுமோ என்பதும் ஒரு பொருளாகும். மதங்கரது தவப்பள்ளியின் மாண்பினைச் சுட்டும்போதும் ‘புண்ணியம் புரிந்தோர் வைகும் துறக்கமே போன்றது’ (3699) என்று கம்பர் குறிப்பிடுவது இணைத்து உணரத்தக்கது. துறக்கம்-சுவர்க்க லோகம்; எண்ண அருங்குணம்-அளவிட இயலாத கல்யாண குணங்கள்; போகம்-இன்ப நுகர்ச்சி; ஒண்ணுமோ - ஓகாரம் எதிர்மறை. 5 அமரர் நகரினும் சிறந்தது |