பக்கம் எண் :

  நகரப் படலம்109

இடமும்   இல்லை என்பதால்; குன்று  ஓங்கு  தோளோர் -  மலை
போன்ற தோள்களை உடைய அந்நகரத்து ஆண்களின்; குணம் கூட்டு
இசைக்  குப்பை  என்ன
-  சிறந்த  குணங்களுடன் கூடிய நட்புள்ளம்
புகழ்த்  தொகுதி  ஆகிய  நல்ல  பண்புகள்  உயர்ந்திருப்பது  போல;
ஓங்கல்  நாண  உயர்ந்தோங்கின-  வாயில் மதில்  ஆகியவைகளின்
உயரத்தைக் கண்டு மலையும் நாணுமாறு உயர்ந்து விளங்கின.

‘இஞ்சி ஒன்றோடிரண்டு’ என்பதற்கு அக நகர். இடை நகர். புறநகர்
மதில்கள்  மூன்று  என்பது  கருத்து.  கூட்டு:  நட்பு.  இசைக்குப்பை:
புகழ்த்  தொகுதி.  ஓங்கல்:  மலை.  இஞ்சி:  மதில்.  70. 71. இரண்டு
பாடல்களாலும்    கொடிகளும்.   தோரண   வாயிலும்   சிறப்பித்துக்
கூறப்பட்டன.                                            71
 

164.காடும். புனமும். கடல் அன்ன கிடக்கும். மாதர்
ஆடும் குளனும். அருவிச் சுனைக் குன்றும். உம்பர்
வீடும். விரவும் மணப் பந்தரும். வீணை வண்டும்
பாடும் பொழிலும். மலர்ப் பல்லவப் பள்ளி மன்னோ!

 

காடும்   புனமும்  கடலன்ன  கிடங்கும் - அந்நகரைச் சூழ்ந்த
காடுகளிலும் கொல்லைகளிலும் கடல் போன்ற அகழியின் ஓரங்களிலும்;
மாதர்    ஆடும்  குளனும் -   பெண்கள்    நீர்    விளையாடும்
தடாகங்களிலும்;அருவிச்    சுனைக்  குன்றும் -   அருவிகளையும்.
சுனைகளையும்   உடைய   மலைகளிலும்;   உம்பர் வீடும்-  மேல்
வீடுகளிலும்;   விரவும்   மணப்பந்தரும் -  பற்பல   இடங்களிலும்
விரவியுள்ள  முத்துப்   பந்தர்களிலும்;   வீணை  வண்டும்  பாடும்
பொழிலும்
-  வீணை    போல   வண்டுகள்   ரீங்காரம்   செய்யும்
சோலைகளிலும்;   மலர்ப்பல்லவப்   பள்ளி   மன்னும்-   (ஆகிய
இடங்களிலெல்லாம்)   மலர்களாலும்   தளிர்களாலும்   அமைந்துள்ள
படுக்கைகள் நிலைத்திருக்கும்.

அந்நகரத்தில்     வாழ்பவர்களின் செல்வச் செருக்கையும் கவலை
இல்லாமையையும்.  களிப்பின்  மிகுதியையும்  காட்டி  நிற்கும் பாட்டு
இது.  வீறு  கோள்  அணியாகும்.  மாதர்:  அழகு-  பண்பாகு பெயர்
(பெண்களை  உணர்த்தி  நின்றது). பல்லவம்: இளந்தளிர்.  உம்பர்வீடு:
மேன்மாடி. மன்னோ: அசை.                               72
 

165.தெள் வார் மழையும். திரை ஆழியும் உட்க. நாளும்.
வள் வார் முரசம் அதிர் மா நகர் வாழும் மாக்கள்-
கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை; யாதும்
கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ.

 

தெள்வார் மழையும் திரை ஆழியும் உட்க  - தெளிந்த நீரைத்
தரும் மேகங்களும் அலைகளை உடைய கடலும் அஞ்சும்படி; நாளும்