பக்கம் எண் :

110பால காண்டம்  

வள்வார்    முரசம் அதிர் மாநகர்- நாள்தோறும் தோல் வாரினால்
கட்டிய    பேரிகைகள்   எப்போதும்    ஒலித்துக்   கொண்டிருக்கும்
அந்நகரில்; வாழும்   மாக்கள் -   வாழ்கின்ற   ஐயறிவே   உடைய
மாக்களிடையே  கூட;  கள்வார்  இலாமைப்   பொருள்  காவலும்
இல்லை
- களவு  செய்பவர்   இல்லாமையால் பொருள்களைக் காவல்
காப்பவரும் இல்லை; யாதும் கொள்வார் இலாமை கொடுப்பார்களும்
இல்லை
- எதையும்  யாசிப்பவர்  இல்லையாதலால்  கொடையாளிகளும்
அந்த நகரத்தில் இல்லை.

வறுமைப்   பிணியும். அதன் காரணமாகச் செய்யும் களவு முதலிய
வஞ்சகச்  செயல்களும்  அயோத்தி  நகரில் இல்லை என்பது கருத்து.
மாக்கள்   என்பது  அறிவில்  தாழ்ந்தவர்களைக்  குறிக்கும்  “மாவும்
மாக்களும்”  ஐயறிவினவே”  என்பது  தொல்கப்பியம்  அறிவுக் குறை
உள்ளவர்களிடை  களவு  செய்யும்  கீழ்மை இல்லை என்பது கருத்து.
தெள்வார்  மழை  என்பதற்கு தெளிவுடைய மேகம் என்றும் பொருள்
கூறலாம்.  ஆயினும் தெளிந்த நீரைத் தரும்  மேகம் என்பதே சிறப்பு.
மாதோ: அசை.                                          73
 

166.கல்லாது நிற்பார் பிறர் இன்மையின். கல்வி முற்ற
வல்லாரும் இல்லை; அவை வல்லர் அல்லாரும் இலை;
எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே.
இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ.

 

கல்லாது  நிற்பார் பிரர் இன்மையின்- நல்ல கலை நூல்களைப்
படிக்காது  நிற்பவர்களாகிய வீணர்கள் இல்லாமையாலே; கல்வி முற்ற
வல்லாரும் இல்லை
- கல்வியில்  முற்றும்  வல்லவர்  என்று  அங்கு
எவரும் இல்லை; அவை வல்லர் அல்லாரும் இல்லை- அக் கல்வித்
துறைகளில்  வல்லவரும். அஃது இல்லாதவரும் இல்லை; எல்லோரும்
எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தலாலே
-  அந்நகரில் வாழ்பவர்கள்
எல்லோரும்    கல்வி.   பொருள்   ஆகிய   எல்லாச்   செல்வமும்
அடைந்திருப்பதாலே; இல்லரும் இல்லை உடையார்களும் இல்லை-
அந்த நகரத்திலே இல்லாதவரும் இல்லை. உடையவர்களும் இல்லை.

இப்பாடல்   அந்நகரத்தவரின் அறிவுப் பெருக்கத்தையும். செல்வச்
சிறப்பினையும்  தெரிவிக்கிறது.  கல்லாத  வீணரைப்  ‘பிறர்’ என்றார்.
அங்குக்   கற்றவர்-கல்லாதவர்  என்ற  வேறுபாட்டையோ.  செல்வர்.
வறியவர் என்ற வேறுபாட்டையோ காண இயலாது என்பது கருத்து.74
 

167.ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து. எண் இல் கேள்வி
ஆகும் முதல் திண் பணை போக்கு. அருந் தவத்தின்
சாகம் தழைத்து. அன்பு அரும்பு. தருமம் மலர்ந்து.
போகங் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே.