பக்கம் எண் :

  நகரப் படலம்111

ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து - கல்வி  என்னும்  ஒரு
வித்து  ஒப்பற்றதாக  முளைத்து  மேலெழுந்து;  எண்ணில் கேள்வி
ஆகும் 
- எண்ணற்ற  பல்நூல்  கேள்வியாகிய;  முதல்  திண்பணை 
போக்கி
-முதன்மையும்.  வலிமையும்  வாய்ந்த  கிளைகளை  எங்கும்
பரவச் செய்து; அரும் தவத்தின் சாகம் தழைத்து - அரிய தவமாகிய
இலைகள்   தழைத்து;  அன்பு  அரும்பி  -  எல்லா உயிர்களிடமும்
செலுத்தும்  அன்பாகிய  அரும்பு அரும்பி;  தருமம் மலர்ந்து- அறச்
செயல்களாகிய  மலர்கள்  மலர்ந்து;  போகம்  கவி  ஒன்று - இன்ப
அநுபவம்   என்னும்   பழத்தை; பழுத்தது  போலும் - பழுத்த  பழ
மரத்தைப் போன்று (அந்த அயோத்தி மாநகர்) பொலிந்து விளங்கியது.

அயோத்தியின்     சிறப்பைக்   கூறும்  இப்பாடல் முற்றுருவகம்.
கல்வியால்   அடக்கம்;   அடக்கத்தால்   நல்வாழ்வு-  நல்வாழ்வால்
பொருள்-  அற  வழியே  பெற்ற பொருளால்  அறம். அவ்வறத்தால்
இன்ப  அநுபவம்  கிடைக்கும்  என்பதனை நயம்படக் கூறும் பாட்டு
இது எனலாம்.                                          75