பக்கம் எண் :

112பால காண்டம்  

4. அரசியற் படலம்
 

அந்தக்  கோசல நாட்டின் மன்னனான தயரதச் சக்கரவர்த்தியினது
ஆட்சிச்   சிறப்பைக்   கூறும்  பகுதி  இது.  தயரதனின்  பெருமை-
குடைச்சிறப்பு  -  அரசு  செய்யும்  திறம்  ஆகியவைகளை  இந்தப்
படலத்தில்  காணலாம். முதல்  ஆறு பாடல்களால் தயரத வேந்தனது
தனிப்பெருஞ்சிறப்பைக் கூறுகிறார்.
 

168.அம் மாண்நகருக்கு அரசன் அரசர்க்கு அரசன்;
செம் மாண் தனிக் கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான்;
இம் மாண் கதைக்கு ஓர் இறை ஆய இராமன் என்னும்
மொய்ம் மாண் கழலோன்-தரு நல் அற மூர்த்தி அன்னாங்

 

அம்மாண்     நகருக்கு அரசன் - அத்தகைய  மாண்பு மிகுந்த
நகரத்துக்கு அரசனாய் இருப்பவன்; அரசர்க்கு அரசன்- மன்னர்களுக்
கெல்லாம்  மன்னனான சக்கரவர்த்தி; மாண் தனிக் கோல்- மாட்சிமை
மிக்க தனது ஒப்பில்லாத செங்கோலாகிய ஆட்சிமுறை;  உலகு ஏழினும்
செல்ல  நின்றான்
- ஏழு  உலகங்களிலும் செல்லுமாறு  ஆட்சி  செய்து
நிலைத்தவனாவான்.   மேலும்   அவன்;  இம்மாண்   கதைக்கு  ஓர்
இறையாய
-   இந்தப்   பெருமைபொருந்திய   இராமாயணம்  என்னும்
கதைக்குத்    தலைவனான;   இராமன்   என்னும்     மொய்மாண்
கழலோன்தரு
-  இராமன்   என்ற   பெயரை   உடைய  வன்மையும்
பெருமையும் உள்ள வீரக்கழல்  அணிந்தநம்பியைப் பெற்ற;  அன்னான்
நல்லற மூர்த்தி
- நல்லறத்தின் வடிவமுமாவான்.

‘அம்மாண்நகர்’ என்பதிலுள்ள அகரச்சுட்டு. நகரப்படலத்தில் கூறிய
பெருமையை  எல்லாம்  குறித்து  நின்றது. ‘தனி’:  தயரதனது  ஒப்பற்ற
ஆட்சியை  உணர்த்தும் ‘கோல்’: நல்லாட்சியைக் குறிக்கும்  ஒரு மரபுச்
சொல்.   இவ்   வேந்தனது    ஆணை    எவ்வுலகினிலும்  செல்லும்
என்பதனை  ‘உலகேழினும்  செல்ல’ என்றார்.  இறை: தலைவன். மெய்:
வலிமை.  ராமன்:  அழகன்  என்ற   பொருள்  உடையச் சொல்லாகும்.
மூர்த்தி:  உருவம்  (வடிவம்).  நல்லறமே   திரண்டு  ஓர் வடிவானவன்
என்பது பொருள்.                                           1