பக்கம் எண் :

  அரசியற் படலம்113

169.
 

ஆதிம் மதியும். அருளும். அறனும். அமைவும்.
ஏதில் மிடல் வீரமும். ஈகையும். எண் இல் யாவும்
நீதிந் நிலையும். இவை நேமியினோர்க்கு நின்ற

பாதி; முழுதும் இவற்கே பணி கேட்ப மன்னோ.
 

ஆதி மதியும் அருளும்- முதன்மையாகிய மெய்யறிவும். அருளும்;
அறனும்  அமைவும்-  தனக்குக் கூறிய அறநெறி தவறாமையும் சாந்த
குணமும்; ஏதில்  மிடல்  வீரமும்-  குற்றமற்ற  வலிமை பொருந்திய
வீரமும்; ஈகையும் நீதி நிலையும்- கொடையும். நீதியின்கண் நிற்றலும்;
எண்ணில்  யாவும்  இவை-   போன்ற   நற்பண்புகளாகிய  இவை;
நேமியினோர்க்குப்  பாதிநின்ற-  மற்ற   அரசர்களுக்குப்  பாதியே
நின்றன;  முழுதும் இவற்கே  பணிகேட்ப- அக்குணங்கள் முழுவதும்
இந்தத் தசரத மன்னனுக்கே ஏவல் கேட்டு நிற்பனவாகும்.

மன்   ஓ: அசைச் சொற்கள். கேட்ப: எதிர்கால வினை.  அமைவு:
நிறைவுமாம்.  ‘நேமியினோர்க்கு  அவை நின்று’ எனவும் இவற்கு பணி
கேட்ப     எனவும்     கூறியதன்       நயம்        கருதத்தக்கது.
தொடர்பில்லாதவரிடமும்   செல்லும்   அருள்உடையான்    ஆதலின்
தொடர்புடையவரிடம் அன்பும் உடையான் என்பது தானே  புலனாகும்.
‘எண்ணில்’  என்றதற்கு யோசித்துப் பார்த்தால் என்பதும்  பொருளாம்.
“நட்பும்.  தயையும்.  கொடையும்  பிறவிக்குணம்” என்றபடி  பிறப்பில்
அமைந்த  இயல்பான  அறிவையே  ‘ஆதிமதி’ என்றார்.  “ஆதிம்மதி”
நீதிந்நிலை என ஓசை நயம் கருதி மிக்கது. விரித்தல் விகாரம்.      2
 

170.மொய் ஆர்கலி சூழ் முது பாரில். முகந்து தானக்
கை ஆர் புனலால் நனையாதன கையும் இல்லை;
மெய் ஆய வேதத் துறை வேந்தருக்கு ஏய்ந்த. யாரும்
செய்யாத. யாகம் இவன் செய்து மறந்த மாதோ.

 

மொய்  ஆர்கலி சூழ் முது பாரில்- நிறைந்த  கடலால்  சூழ்ப்
பட்டதும்  பழமை  வாய்ந்ததுமான இந்த உலகத்தில்; முகந்து  தானக்
கை ஆர்புனலால்
- வாரிமுகந்து. தானம் செய்கின்ற கையில்  நிறைந்த
நீரினால்;   நனையாதன   கையும்  இல்லை  - நனைக்கப் பெறாத
கைகளும் இல்லை; மெய்யாய வேதத்துறை வேந்தருக்கு-நிலைபெற்ற
வேத நெறியில்  நிற்கும் அரசர்களுக்கு;  ஏய்ந்த  யாரும்  செய்யாத
யாகம்
-பொருந்தியனவான  வேறு  எவரும்  செய்ய  இயலாது  நின்ற
யாகங்கள்;   இவன்   செய்து  மறந்த-  இந்த.  தசரத  மன்னனால்
செய்யப்பட்டு மறக்கப் பெற்றவையாகும்.

மதோ:    அசை. மொய்: வலிமை இங்கு நிறை உணர்த்தி நின்றது.
ஆர்கலி:  கடல்  (நிறைந்த  ஓசை  உடையது)  என்பது  பொருளாம்.
‘முதுபார்’ என்றது. உலகின் தொன்மையை நினைந்தென்க. வேந்தர்க்கு
ஏய்ந்த யாகங்கள். இராச சூயம்- அசுவமேதம் முதலியனவாகும். வேறு
எவராலும் செய்ய இயலாது நின்ற யாகங்கள் எல்லாம். தசரத மன்னன்
எப்போதோ செய்து மறந்து